Just In
- 6 min ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 3 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
Don't Miss!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? -வீடியோ!
இளைஞர் ஒருவர் தனது இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார்சைக்கிளை, அழுக்கான டம்மி மோட்டார்சைக்கிளைப் போல் உருவாக்கியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
பல இளைஞர்களின் கனவு மோட்டார்சைக்கிளாக இருக்கும் கேடிஎம் 390 ட்யூக்கினை, இளைஞர் ஒருவர் அக்கு வேர் ஆணி வேராக பிரித்துப் போட்டுள்ளார். இதுகுறித்த வீடியோக் காட்சியினை மேக் ரைடர் என்னும் யுடியூப் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் தங்களுக்கு பிடித்தமான காரையே அல்லது பைக்கினையோ, பல ஆயிரங்கள் செலவு செய்து மாடிஃபை செய்து பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஓர் இளைஞர் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொகையுள்ள மோட்டார்சைக்கிளினை மிகவும் கொடூரமான முறையில் மாற்றியமைத்துள்ளார்.
இந்த மாற்றத்தினால், அந்த மோட்டார்சைக்கிளை பார்ப்பதற்கு பழைய இரும்பு கடையில் இருந்து கொண்டுவரப்பட்ட டம்மி மோட்டார்சைக்கிளைப் போன்று காட்சியளிக்கிறது. மிகவும் மோசமான நிலையில், அழுக்காக காட்சியளிக்கும் அந்த மோட்டார்சைக்கிளை ரேஸிற்கு பயன்படுத்தும் விதமாக அவர் மாற்றியமைத்துள்ளார்.
இந்த மோட்டார்சைக்கிளானது, சென்னையில் சுமார் ரூ. 2.34 லட்சம் முதல் ரூ. 2.42 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டார்சைக்கிளின் ஆரம்ப நிலை உருவத்தைப் பார்க்கும் எந்த ஒரு இளைஞரும் வேதனைப்படுவார்கள். ஏனென்றால், அந்த பைக்கை அந்த அளவிற்கு கொடூரமான முறையில் உருமாற்றியுள்ளார் அதன் உரிமையாளர்.
ஆனால், அதன்பின்னர் அந்த கேடிஎம் 390 ட்யூக் மோட்டார்சைக்கிளை ரேஸ் மோட்டார் சைக்கிளைப் போன்று அவர் மாடிஃபை செய்கிறார். அவ்வாறு அந்த மோட்டார்சைக்கிளை டர்ட் ரேஸிங் மோட்டார்சைக்கிளாக மறு உருவெடுக்கிறது.
ஆனாலும், இவ்வளவு அதிக தொகையுடைய அந்த மோட்டார்சைக்கிளை இவ்வாறு செய்வதற்கு எவ்வாறு மனம் வருகிறதோ, என இந்த வீடியோவைப் பார்க்கும் பல இளைஞர்கள் புலம்பி தள்ளுவதை அந்த யுடியூப் வீடியோவிற்கு கீழே வந்துள்ள கமெண்டைப் பார்த்தால் தெரியும்.
கேடிஎம் ட்யூக் 390 மோட்டார்சைக்கிளில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, சென்சார் மூலமாக எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் ரைடு பை வயர் நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இதில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..