Just In
- 43 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 4 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...? அசர வைக்கும் ஐடியா...!
இளைஞர் ஒருவர் புதிய அபராதத்தில் இருந்து தப்பிக்க வியத்தகு காரியத்தை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேலையில், புதிய ஹாட் டாப்பிக்காக கடந்த 1ம் தேதி அறிமுகமான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மாறியிருக்கின்றது.
இது, ஹாட் டாப்பிக்காக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. அண்மைக் காலங்களாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் உச்சபட்ச அபராதத் தொகைதான் அது.
இதுமட்டுமின்றி, இந்த புதிய அபராத திட்டம் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் சில இடங்களில் மோதலையும்கூட ஏற்படுத்தி வருகின்றது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு காணும் விதமாக கொண்டுவரப்பட்ட அபராதத் திட்டம் பெரியளவில் பலனளிக்காத காரணத்தால், புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் அதிகபட்ச அபராதத்தை வசூலிக்கின்ற வகையிலான மாற்றத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.
இத்திட்டம் அறிமுகம் நாளில் இருந்து போலீஸார் ரவுண்டு கட்டி வேட்டையை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், செய்யப்பட்ட அனைத்து வேட்டைகளும் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
அதிலும், மிக முக்கியமாக ரூ. 16 ஆயிரம் மதிப்புடைய ஸ்கூட்டருக்கு ரூ. 24 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் நாடு முழுவதும் காட்டு தீயாய் பரவியது.
போலீஸாரின் இத்தகைய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், ஏதும் செய்ய முடியாத சூழலில் இருக்கின்றனர்.
இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் போலீஸாரின் அபராத கெடுபிடியில் இருந்து தப்பிப்பதற்காக, வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம்குறித்த அனைத்து ஆவணங்களையும் ஹெல்மெட் ஒட்டியவாறு வளம் வருகின்றார்.
இந்த சுவாரஷ்யமான சம்பவம் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வியத்தகு செயலை செய்தவரின் பெயர் ராம் ஷா என கூறப்படுகின்றது. இவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.
ராம் ஷா பெரும்பாலும் பணியின் நிமித்தமாக எப்போதும் இருசக்கர வாகனத்திலேயே பயணிக்கும் நிலையுள்ளது. ஆகையால், அவர் போலீஸாரிடம் சிக்கும்போது எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரின் தலைக் கவசத்தில் ஓட்டுநர் உரிமம், காப்பீடு நகல், பியூசி சான்று மற்றும் ஆர்சி புத்தகம் உள்ளிட்டவற்றை ஒட்டியுள்ளார்.
"வாகன தணிக்கையின்போது, அய்யய்யோ சார் அந்த பேப்பர மறந்து வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் சார், என்றுகூறி புலம்புவதற்கு பதிலாக" இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
முன்னதாக, இதேபோன்று ஓர் நடவடிக்கையை இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மேற்கொண்டிருந்தார். அவர், இவரைக் காட்டிலும் மிக வித்தியாசமாக, ஸ்கூட்டரின் முகப்பு பகுதி பாடி பேனலில் அனைத்து ஆவணங்களையும் ஒட்டியிருந்தார்.