Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 3 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!
ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கி எறிந்து வருகின்றன. ஆனால் பஜாஜ் நிறுவனம் குடும்பத்தில் ஒருவனாய் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான சரிவை தற்போது சந்தித்து கொண்டுள்ளது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது பெரும்பாலான வாகன நிறுவனங்கள் உற்பத்தியை தொடர்ந்து குறைத்து கொண்டே வருகின்றன. மறுபக்கம் ஏராளமான வாகன டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டு கொண்டுள்ளன. இதன் காரணமாக பல லட்சக்கணக்கான ஊழியர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை இந்தியாவில் 200க்கும் அதிகமான டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் துறை சார்ந்த 3.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் அதிகமான ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசு உடனடியாக ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்பதுதான் ஆட்டோமொபைல் தொழில் துறையினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு காரணமாகதான் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை குறைய காரணம் என்பதும் ஆட்டோமொபைல் துறையினரின் கருத்து. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வேகத்தை தற்போதைக்கு குறைத்து கொள்ள மத்திய அரசு முன்வந்துள்ளது.
ஆனால் ஆட்டோமொபைல் துறையினரின் ஜிஎஸ்டி குறைப்பு கோரிக்கை நிறைவேறுவது எந்த அளவிற்கு சாத்தியம்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் மத்திய அரசு அதில் அவ்வளவு ஆர்வமாக இருப்பது போல் தெரியவில்லை. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ராஜிவ் பஜாஜ் தற்போது பேசியுள்ளார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜிவ் பஜாஜ், அரசிடம் உதவி கேட்பதற்கு முன்னதாக ஆட்டோமொபைல் துறை முதலில் தனது குறைபாடுகளை உற்று நோக்கி களைய வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஏராளமான நிறுவனங்களால் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
இதற்கான காரணத்தை வெளிப்படையாகவே கூறுகிறேன். அவர்களின் தயாரிப்புகள் சராசரி என்ற அளவில் மட்டுமே உள்ளன. அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை'' என்றார். மார்க்கெட் மந்த நிலை காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் சமீப காலமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டேதான் இருக்கின்றன. இதுகுறித்து ராஜிவ் பஜாஜ் கூறுகையில், ''இது மிக கடினமான நேரம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விற்பனை சரிவடைவதை நெருக்கடி என அழைக்க முடியாது. உங்களை வேலையில் இருந்து நீக்க போகிறேன் என கூறினால், எனது ஊழியர்கள் என்னை எப்படி நம்புவார்கள்?
ஊழியர்களின் சம்பளம் என்பது விற்பனையில் வெறும் 4 சதவீதம் மட்டுமே. இந்த சிறிய சேமிப்பிற்காக உங்கள் ஊழியர்களை தூக்கி எறிவது நியாயமானதா? ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்துடன் விளையாட நான் விரும்பவில்லை''என்றார். இதனிடையே பண்டிகை காலத்தின்போது விற்பனை மேம்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ராஜிவ் பஜாஜ் தெரிவித்தார்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!