Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் தொடரும் சேவை... அதிர்ச்சி தகவல்...!
அண்மையில் வெளியாக நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் பைக் டாக்ஸி சேவை இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களின் சாலைகளை ஆளும் வாகனங்களாக, கால் டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் இருக்கின்றன. இவை, வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பிக்-அப் செய்து, அவர்கள் விரும்பிய இடத்தில் டிராப் செய்கின்றன.
மேலும், இந்த சேவையானது, ஆன்லைன் அல்லது மொபைல் போன் ஆப்பினைச் சார்ந்து இயங்குகின்றது.
முன்னதாக இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், தற்போது பைக்குகளும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இவை, கார்கள் செல்ல முடியாத குறுகலான பாதைகளில்கூட செல்வதால், பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேசமயம், கார்களின் வாடகையைக் காட்டிலும், குறைவான கட்டணத்தை பெறுவதாலும், இந்த சேவை பலர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், மூன்று கிலோ மீட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கார் மற்றும் ஆட்டோவைக் காட்டிலும் மிக மலிவான கட்டணமாகும்.
மேலும், பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்துவதன்மூலம், நகர்புற சாலைகளில் பயணிப்பது மிக எளிதாக இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துடன், கார்களில் செல்லும் நேரத்தைக் காட்டிலும் மிக விரைவாக சென்றடைந்துவிடுவதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், இந்த பைக் டாக்ஸிகள் பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாகவே, கடந்த வியாழக்கிழமை ( ஜூலை 18) சென்னை உயர்நீதிமன்றம், பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆகையால், சென்னையில் பைக் டாக்ஸி சேவையை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதிலும், முக்கியமாக தெலங்கானா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தை நீதிபதி ஜெயசந்திரன் கடுமையாக சாடியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், திங்கள் கிழமையான நேற்று வரையிலும், ரேபிடோ நிறுவனத்தின் பைக் டாக்ஸிகள், உத்தரவை மீறி இயக்கியதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இணை இயக்குனர் அரவிந்த் சங்கா-விடம் கேட்கையில், அவர் மௌனமாக வெளியேறியதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை ஆட்டோ எகனாமிக்டைம்ஸ் ஆங்கில செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக, இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டாக்ஸியாக பயன்படுத்துவது குற்றமாக கருதப்படுகின்றது.
எந்தவொரு வாகனத்தையும் பொதுசேவையில் இயக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட உரிமத்தை அது பெற்றிருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது. அதன்படி, பொதுசேவையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று, பொது பயன்பாட்டு வாகனம் என்பதால், தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகளை அது கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆனால், இதில் எந்தவொரு விதிமுறையையும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பைக் டாக்ஸிகள் கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதன்காரணமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 175 பைக்குகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில், 96 பைக்குகள் சென்னையைச் சேர்ந்தவையாகும்.
மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பைக் டாக்ஸியின் உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போன்று அல்லாமல், இருசக்கர வாகனங்களை பெர்மிட் செய்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவில்லை. மிக தெளிவாக கூறவேண்டுமானால், தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட வர்த்தக வாகனமாக பதிவு செய்ய முடியாது. ஏனென்றால், இதற்கான சட்டம் இன்றளவும் தமிழக போக்குவரத்துத்துறையில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
ஆகையால், தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை தனியார் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக டாக்ஸி சேவையில் அவற்றை பயன்படுத்த முடியாது.
பைக்-டாக்ஸிகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் செய்தால் மட்டுமே பைக் டாக்ஸிகள் ஒரு யதார்த்தமாக முடியும். இதற்கான கூறுகளை மத்திய தற்போது மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆகையால், இன்னும் நான்கு மாதங்களில் பைக் டாக்ஸிக்கான சட்டபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?