Just In
- 14 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 1 hr ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- 2 hrs ago என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
Don't Miss!
- News கோவை: பாஜக அண்ணாமலை வேட்பு மனு ஏற்புக்கு எதிராக அதிமுக, நாம் தமிழர் கட்சி கடும் வாக்குவாதம்!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்!
பெங்களூர் உள்பட மூன்று நகரங்களில் பைக் ஷேரிங் திட்டத்திற்காக புதிய மொபைல்போன் செயலியை ரெட்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆன்லைன் மூலமாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதியை ரெட்பஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தின் பைக் பூல் எனப்படும் புதிய திட்டத்திற்கான ஸ்மார்ட்ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தினசரி அலுவலகத்திற்கு பைக்கில் செல்வோர், மற்றொருவரை கட்டணம் பெற்றுக் கொண்டு அழைத்துச் செல்லும் விதத்தில் இந்த திட்டத்தை ரெட்பஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. நீங்கள் அலுவலகம் செல்லும் வழியிலேயே செல்லும் மற்றொருவரை கட்டணத்துடன் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பை இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெற முடியும்.
பைக் பூலிங் என்ற இந்த வசதிக்கான பிரத்யேக செயலி rPool என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது ரெட்பஸ் நிறுவனம். பைக்கில் பிறரை கட்டணத்துடன் அழைத்துச் செல்பவரை Ride Givers என்ற பெயரிலும், பிறரது பைக்கில் கட்டணத்தை செலுத்தி செல்ல விரும்புவோரை Ride Takers என்று இந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பைக் பூலிங் திட்டத்தின் கீழ் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் முதல் 4 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 10 பயணங்களுக்கு இரட்டிப்பு கட்டணத்தை பெறும் வாய்ப்பையும் இந்த ஆர்-பூல் என்ற செயலி அளிக்கும்.
மேலும், அறிமுகச் சலுகையாக முதல் 5 ஆண்டுகளுக்கான 500 பயணங்களுக்கு ரெட்பஸ் நிறுவனம் சார்பில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று ரெட்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆர்-பூல் மொபைல் செயலியில் பதிவு செய்து கொள்பவர்களின் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுவதால், இது மிகவும் பாதுகாப்பான பயணத்தை இருவருக்கும் வழங்கும் என்று ரெட்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயலி மூலமாக நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம் ஆகியவற்றை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும் என்று ரெட்பஸ் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த புதிய ஆர்-பூல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில நிறுவனங்கள் பைக் பூலிங் மற்றும் கார் பூலிங் சேவைகளை அறிமுகம் செய்தன. ஆனால், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அரசு விதிகள் காரணமாக, அவை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், ரெட்பஸ் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் எவ்விதமான பயன்களை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
குடும்பத்தோட ஜாலியா டூர் போகலாம்! கம்மி ரேட்ல விற்பனைக்கு வரப்போகும் மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்!