Just In
- 36 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 58 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களை தீவிரமாக சோதனையில் ஈடுப்படுத்தி வருகிறது. இதனால் இந்த பைக்குகளின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். அதாவது 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பாகவே இந்த பைக்குகளின் தயாரிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிய சிங்கிள்-சிலிண்டர் ஃப்ளாட்ஃபாரம் தயாராகாவிட்டாலும், ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு பைக்குகளை அப்டேட் செய்யும் வேலையில் இறங்கிவிடும்.
இந்நிறுவனத்தின் புதிய தலைமுறை பைக்குகள் அடுத்த ஆண்டு முதல்-கால்பகுதியில் தான் தயாராக இருக்கும். ஏனெனில் தற்சமயம் பிஎஸ்4 பைக்குகள் தான் பிஎஸ்6-க்கு மேம்படுத்தப்பட்டு வருவதாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ராயல் எண்ட்பீல்டு 350சிசி பைக்குகள் ஃப்யூல்-இன்ஜெக்ஷன் தரத்திற்கும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அப்டேட்டால் இவற்றின் விலை சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. தற்போதைய 350சிசி பைக்குகள் ரூ.1.2 லட்சத்தில் இருந்து ரூ.1.64 லட்சம் வரை எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து 350சிசி பைக்குகளாக சந்தையில் புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு, ட்ரைல்ஸ் மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு புதிய தலைமுறைக்கு ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் மாற்றப்படவுள்ளதால் பைக்குகளில் வித்தியாசமான சேசிஸ் டிசைன், சிறந்த தொழிற்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரைடிங் பயணம் உள்ளிட்டவை கொண்டுவரப்படவுள்ளன. இந்த மேம்பாடுகளுடன் பிஎஸ்6 தரத்திற்கு பைக்குகள் மாற்றப்படவுள்ளதால், தற்போதைய மாடல்களில் உள்ள புஷ்-ராட் சிஸ்டம் பொருத்தப்படுவது நிறுத்தப்படவுள்ளது.
இத்தகைய அப்டேட்கள் குறித்து ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கூறுகையில், எங்களது நிறுவனம் பிஎஸ்6 பைக்குகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் அறிமுகப்படுத்த அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது. பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.
புதிய தலைமுறைக்காக பைக்குகளில் எந்தெந்த தொழிற்நுட்பங்களை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தவுள்ளது என்பது குறித்த தகவல் தெரியவரவில்லை. இருப்பினும் இந்த புதிய தலைமுறை பைக்குகளை புதிய ஃப்ளாட்ஃபாரத்தின் மூலமாக தான் இந்நிறுவனம் சோதனையிடும் என்பது உறுதி.
ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து எந்தவொரு பைக்கும் ஐக்மா 2019 கண்காட்சியில் பங்கேற்கவில்லை. இதனால் இந்நிறுவனத்தின் புதிய பைக்குகளின் அறிமுகம் எதுவும் சில மாதங்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.