Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜாவாவுக்கு போட்டியாக களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் 350 ஏபிஎஸ் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. என்ன ஸ்பெஷல் இருக்குனு, இந்த பதிவில் பார்ப்போம்.
இந்திய இருசக்கர வாகன சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு போட்டியாக ஜாவா பைக் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இரண்டு பைக் நிறுவனங்களும் பாரம்பரியமிக்க மாடல்களைக் கொண்டிருப்பதால் இவற்றிற்கிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய ரக பைக்குகளின் விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாக கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு, ஜாவாவின் வருகை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
ஏனென்றால் இந்தியர்கள் பழைமையான பாரம்பரியமிக்க மாடல் வாகனங்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதன்காரணமாகவே சில வருடங்களாகவே ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பைக் சந்தையில் தனது சாம்ராஜ்யத்தை கடுமையாக நிலைநாட்டி வருகின்றது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
இதனை தக்கவைத்துக்கொள்ள, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துவருகிறது. அந்தவகையில், தனது இரண்டு புதிய அப்கிரேட் செய்யப்பட்ட மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, பூஜ்யம் டவுண் பேமண்டில் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
மேலும், தனது புதிய தயாரிப்புகளை அதிநவீன முறையில் கட்டமைத்து அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படி, அப்கமிங் மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
அதன்படி, கிளாசிக் ரெட்டிச் 350 மாடலின் அனைத்து ரகங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்னும் இரண்டு சக்கரங்களுக்கான டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டது, அதன் வாடிக்கையாளர்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இதைப்போலவே, புல்லட் 500 ஏபிஎஸ் மாடலை கடந்த 10ம் தேதியன்று 1 லட்சத்து 86 ஆயிரத்து 961 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், இந்த ஏபிஎஸ் வசதியில்லாத மற்றொரு வேரியண்ட் மாடல் ரூ.14 ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது புல்லட் 350 மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கட்டமைக்கப்பட்ட மாடலை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுபோன்ற நவீன வசதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ராயல் என்ஃபீல்ட்டின் சந்தையை தக்க வைத்துக்கொள்ளும் செயலாகவே கருதப்படுகிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!