Just In
- 1 hr ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாவாவுக்கு போட்டியாக களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் 350 ஏபிஎஸ் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. என்ன ஸ்பெஷல் இருக்குனு, இந்த பதிவில் பார்ப்போம்.
இந்திய இருசக்கர வாகன சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு போட்டியாக ஜாவா பைக் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இரண்டு பைக் நிறுவனங்களும் பாரம்பரியமிக்க மாடல்களைக் கொண்டிருப்பதால் இவற்றிற்கிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய ரக பைக்குகளின் விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாக கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு, ஜாவாவின் வருகை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
ஏனென்றால் இந்தியர்கள் பழைமையான பாரம்பரியமிக்க மாடல் வாகனங்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதன்காரணமாகவே சில வருடங்களாகவே ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பைக் சந்தையில் தனது சாம்ராஜ்யத்தை கடுமையாக நிலைநாட்டி வருகின்றது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
இதனை தக்கவைத்துக்கொள்ள, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துவருகிறது. அந்தவகையில், தனது இரண்டு புதிய அப்கிரேட் செய்யப்பட்ட மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, பூஜ்யம் டவுண் பேமண்டில் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
மேலும், தனது புதிய தயாரிப்புகளை அதிநவீன முறையில் கட்டமைத்து அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படி, அப்கமிங் மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
அதன்படி, கிளாசிக் ரெட்டிச் 350 மாடலின் அனைத்து ரகங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்னும் இரண்டு சக்கரங்களுக்கான டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டது, அதன் வாடிக்கையாளர்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இதைப்போலவே, புல்லட் 500 ஏபிஎஸ் மாடலை கடந்த 10ம் தேதியன்று 1 லட்சத்து 86 ஆயிரத்து 961 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், இந்த ஏபிஎஸ் வசதியில்லாத மற்றொரு வேரியண்ட் மாடல் ரூ.14 ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது புல்லட் 350 மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கட்டமைக்கப்பட்ட மாடலை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுபோன்ற நவீன வசதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ராயல் என்ஃபீல்ட்டின் சந்தையை தக்க வைத்துக்கொள்ளும் செயலாகவே கருதப்படுகிறது.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!