Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்!
காப்புரிமை பிரச்னை காரணமாக, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 என்ற கடுமைான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. புதிதாக விற்பனைக்கு செல்லும் கார், பைக் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களிலும், குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் எஞ்சின்களை பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது.
இந்த விதிகளுக்கு தக்கவாறு பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை உருவாக்குவதில் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளது.
மேலும், பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து வருகிறது. இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 எஞ்சினில் இடம்பெறும் ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் என்ற சாதனம் காப்புரிமையை மீறி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த ஃப்ளாஷ் எலெக்ட்ரானிக்ஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.
பிஎஸ்-6 எஞ்சினில் இந்த சாதனம் மிக முக்கிய உதிரிபாகமாக இருக்கிறது. எஞ்சின் உற்பத்தி செய்யும் மாறுதிசை மின்னோட்டத்தை குறிப்பிட்ட ஒழுங்குப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையில், நேர் மின்னோட்டமாக மாற்றி பேட்டரிக்கு அனுப்பும் முக்கிய பணியை இந்த சாதனம் செய்யும்.
இந்த சாதனத்தின் செயல்படும் முறைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஃப்ளாஷ் எலெக்ட்ரானிக்ஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எனவே, இதுகுறித்து அமெரிக்காவின் விஸ்கன்சின் நீதிமன்றத்தில் ராயல் என்ஃபீல்டு மீது காப்புரிமை விதிமீறல் குறித்து அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிஎஸ்-6 எஞ்சினுக்குரிய இந்த ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் சாதனத்தை அவுரங்காபாத்தை சேர்ந்த வரோக் என்ற நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறுகிறது. காப்புரிமை பிரச்னையையடுத்து, இரு நிறுவனங்களுக்கும் இடையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளில் சுமூக தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
எனவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில், காப்புரிமை பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால், புதிய சப்ளையரிடமிருந்து ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் சாதனத்தை பெறும் நிலைக்கு ராயல் என்ஃபீல்டு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறும்போது, இந்த சாதனத்தின் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், தனது பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள்களின் விலை கணிசமாக உயர்த்தும் நிலைக்கு ராயல் என்ஃபீல்டு தள்ளப்படலாம்.
அதேபோன்று, குறுகிய காலத்தில் புதிய ரெகுலேட்டர் ரெக்டிஃபயர் சாதனம் பொருத்திய, பிஎஸ்-6 எஞ்சினை உருவாக்கி சோதனை ஓட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். இதனால், பிஎஸ்-6 மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.