Just In
- 51 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம், பிஎஸ்6 மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு ஆரஞ்ச் நிறத்தை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன் புகைப்படங்களை தகவல்களையும் இந்த செய்தியில் விரிவாக காணலாம்.
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள ஆரஞ்ச் நிற தேர்வில் தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்குகளை ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தது. ஆனால் தண்டர்பேர்டு 500எக்ஸின் தயாரிப்பு அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படவுள்ளதால், இந்த நிறத்தேர்வு அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
346சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகின்ற தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக் 5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படுவதால் இதன் என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்படவுள்ளது.
ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் முதல் தண்டர்பேர்டு க்ரூஸர் பைக்கை 2002ல் அறிமுகம் செய்தது. அதன் பின் இந்த மாடலில் 350சிசி மற்றும் 500சிசி பைக்குகள் ஃபேஸ்லிஃப்ட் உடன் டிஸ்க் ப்ரேக், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் சில காஸ்மெட்டிக் பாகங்களின் வேறுபாட்டுடன் அறிமுகமாகின.
இதில் எக்ஸ் சீரிஸ் பைக்குகள் முதன்முதலாக கடந்த 2018ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் அறிமுகமான தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக் தண்டர்பேர்டு 350சிசி பைக்கை விட சில காஸ்மெட்டிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை கொண்டிருந்தது. ப்ரீமியம் விலையில் இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதால் இளைஞர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
500சிசி விற்பனையாகி வரும் புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் பைக்குகளின் தயாரிப்பு அடுத்த ஆண்டில் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், இந்த பைக்குகளை அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் அமலாக உள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான். ஏனெனில் 500சிசி பைக்குகளை பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றுவது அதிக செலவு கொண்ட வேலையாக இருக்கிறதாம்.
இதனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 350 சீரிஸ் பைக்குகள் மட்டும் தான் பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 உள்ளிட்ட இந்நிறுவனத்தின் பைக்குகள் கடந்த சில வாரங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடைசியாக தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய பைக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.
இதனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகத்தை 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பாகவே எதிர்பார்க்கலாம். இவ்வாறு முன்னதாகவே அறிமுகமாகவுள்ள பைக்குகள் குறித்து தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளியாகி வரும் 650சிசி பைக்குகளும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் பிஎஸ்6 பைக்குகள் அனைத்தும் புதிய ஃப்ளாட்ஃபாரத்தின் மூலமாக தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.