Just In
- 2 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
9.5 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய இலக்கு... ராயல் என்பீல்டு முதலீடு செய்யப்போகும் தொகை இதுதான்
2019-20ம் நிதியாண்டில், 9.5 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரெட்ரோ-கிளாசிக் மோட்டார் சைக்கிள்களால் அறியப்படும் ராயல் என்பீல்டு நிறுவனம், ஈச்சர் மோட்டார்ஸின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், 2019-20ம் நிதியாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 700 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் 2019-20ம் நிதியாண்டில் 9.5 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யப்படும் தொகையானது, புதிய பிளாட்பார்ம்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது. சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் வடகல் என்ற பகுதியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதன் இரண்டாவது பேஸ் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனை நிறைவு செய்யவும் இந்த முதலீட்டு தொகை பயன்படுத்தப்படவுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதலீடு செய்வது குறித்து ஈச்சர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சித்தார்த் லால் கூறுகையில், ''பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாறுவதில் ராயல் என்பீல்டு இந்த ஆண்டு கவனம் செலுத்தும்.
வல்லம் வடகல் பிளாண்ட்டில் இரண்டாவது பேஸில், வணிக ரீதியிலான உற்பத்தி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கட்டப்பட்டு வரும் எங்கள் டெக்னாலஜி சென்டரின் கட்டுமான பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது'' என்றார். இதனிடையே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே.தாசரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2018-19ம் நிதியாண்டில் மொத்தம் 826,098 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீத வளர்ச்சியாகும். 2018-19ம் நிதியாண்டில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட 826,098 மோட்டார் சைக்கிள்களில், உள்நாட்டில் விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கை 805,273 (1 சதவீத வளர்ச்சி). அதே சமயம் ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 20,825 (8 சதவீத வளர்ச்சி).
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?