Just In
- 50 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விலை உயர்ந்த பைக்கை மீட்க உதவிய 1,500 ரூபாய் தொழில்நுட்பம்.. திருடியது யார் என தெரிந்தால் ஷாக் உறுதி
விலை உயர்ந்த பைக் ஒன்று, வெறும் 1,500 ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. பைக்கை திருடியது யார்? என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் புஷ்பராஜ். இவருக்கு 19 வயதாகிறது. இவர் புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் (Bajaj Pulsar 200 NS) பைக்கை சமீபத்தில் வாங்கினார். இதனுடன் ஜிபிஎஸ் டிராக்கர் (GPS Tracker) ஒன்றையும் பொருத்தி கொண்டார்.
இந்த சூழலில் புஷ்பராஜின் வீடு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அவரது பல்சர் 200 என்எஸ் பைக், நேற்று முன் தினம் (பிப்ரவரி 17) அதிகாலை 4 மணியளவில் திருடப்பட்டது. என்றாலும் பைக் எங்கே உள்ளது? என்பதை ஜிபிஎஸ் டிராக்கர் காட்டி கொடுத்தது.
உடனடியாக இதுகுறித்து தனது நண்பர்களுக்கு புஷ்பராஜ் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் புஷ்பராஜின் நண்பர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் விரைந்து வந்தனர். அப்போது செக்ரட்ரியேட் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பைக் திருடப்பட்டது குறித்து அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆட்டோ ஒன்றை எடுத்து கொண்டு, பைக்கை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாருடன் புஷ்பராஜூம் ஆட்டோவில் உடன் சென்றார்.
அப்போது ஜிபிஎஸ் டிராக்கரை சோதித்து பார்த்ததில், திருடப்பட்ட புஷ்பராஜின் பல்சர் 200 என்எஸ் பைக் திருவான்மியூரில் இருப்பது தெரியவந்தது. அத்துடன் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி பைக் சென்று கொண்டிருந்தது.
உடனடியாக போலீசார் பைக்கை பின் தொடர்ந்து சென்றனர். நீண்ட நேர தூரத்தலுக்கு பிறகு, கூவத்தூர் பஸ் ஸ்டாண்டு அருகே பைக்கை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கிய புஷ்பராஜ், பைக்கை திருடிய திருடனின் காலரை பிடித்தார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புஷ்பராஜின் நண்பரான மேகசூர்யா என்பவர்தான் பைக்கை திருடி சென்றிருந்தார். புஷ்பராஜூம், மேகசூர்யாவும் 9ம் வகுப்பு வரை பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பள்ளி பருவத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நாளடைவில் மேகசூர்யா பாதை மாறி சென்றுள்ளார். இதன்பின் மேகசூர்யாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் வினோத் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேகசூர்யாவின் கூட்டாளியான இவர், பைக்கின் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இவர்கள் இருவரும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். திருடப்பட்ட பல்சர் 200 என்எஸ் பைக், ரூ.1-ரூ.1.10 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வெறும் 1,500 ரூபாய் மதிப்புள்ள ஜிபிஎஸ் டிராக்கர் உதவியுடன் பைக் மீட்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் எவ்வளவு முக்கியம் என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம்.
அதுவும் தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் மிக மிக அவசியம். சமீப காலமாக சென்னையில் தொடர்ச்சியாக வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாம்பரம் ரயில் நிலையத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த 9 பைக்குள், ஒரே நாளில் திருடப்பட்டன. அத்துடன் உதிரி பாகங்கள் மற்றும் பெட்ரோல் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவதாகவும் பைக் உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதவிர கடந்த ஜனவரி 4 முதல் 31 வரையிலான கால கட்டத்தில், பொது சுகாதார இயக்குனரகத்தை சேர்ந்த பணியாளர்களின் 6 டூவீலர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த 6 டூவீலர்களும் பணி நேரத்தில் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?