Just In
- 28 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காவலர்களுக்காக புது வேடம் அணிந்த சுஸுகி ஜிக்ஸர் 250 எஸ்எஃப்.. சிறப்பு தகவல் உள்ளே..!
சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய அறிமுகமான ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடல் பைக்குகள் போலீஸாருக்காக புது வேடம் ஒன்றை அணிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம், புத்தம் புதிய ஸ்டைலிலான ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை கடந்த மே மாதம் 20 தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும், அன்றைய தினமே அந்த பைக்கை விற்பனைக்கும் அறிவித்தது.
கூடுதல் கவர்ச்சியான வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பைக்கிற்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
முன்னதாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்நிறுவனத்திற்கு ஜிக்ஸெரின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் தற்போது நல்ல சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
ஆகையால், நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் சுஸுகி ஜிக்ஸெர் வரிசையில் உள்ள பைக்குகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.
இந்நிலையில், சுஸுகி நிறுவனம் சிஎஸ்ஆர் செயல்பாட்டின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதி போக்குவரத்து போலீஸாரின் பயன்பாட்டிற்காக புத்தம் புதிய பத்து ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்குகளை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள்கள் போலீஸாரின் போக்குவரத்து பணியின்போது உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்த இருசக்கர வாகனங்களுக்கான சாவிகள் அனைத்தையும் குருகிராம் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் காவலர்கள் அனைவருக்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வழங்கினர்.
சுஸுகி நிறுவனம் இதுபோன்று பைக்குகளை போலீஸாரின் பணிகளுக்கு வழங்குவது முதல் முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டிலும் இதுபோல சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்குகள் வழங்கப்பட்டன. அவை, சட்ட ஒழுங்கு போலீஸாரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு, ஒட்டுமொத்தமாக 60 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சாலை பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலை கவசங்களும் அதே ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது போலீஸாரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள பைக்குகள் அனைத்தும், அவசர காலங்களில் அவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நீளமான வின்ட் ஷீல்டுகள், பக்கவாட்டு பகுதியில் உபகரணங்களை கையாளுகின்ற வகையிலான பெட்டி, போலீஸ் என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன், காவலர்கள் வாகனங்களில் காணப்படும் சிவப்பு மற்றும் நீல நிறங்கள் அடங்கிய மின் விளக்குகளும் பைக்கின் முன் மற்றும் பின்பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்குகள் போலீஸாரின் பயன்பாட்டிற்காக மேற்கூறியது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்று தனித்துவமான லுக்கைப் பெற்றிருக்கின்றன.
ஆனால், எஞ்ஜின் மற்றும் செயல்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்குகள் எத்தகைய திறனைப் பெற்றிருக்கின்றதோ, அதே திறனைதான் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பைக்குகளும் வெளிப்படுத்தும்.
சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் அதீத சக்தியை வெளிப்படுத்துகின்ற வகையில் 249சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பைக் கொண்டதாகும். மேலும், இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!