Just In
- 58 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!
இந்திய ஆட்டோமொபைல்துறை சந்தித்து வரும் தொடர் விற்பனைச் சரிவின் காரணமாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தை என்ற பட்டத்தைச் சூடிவந்த இந்திய ஆட்டோமொபைல்துறை அண்மைக் காலமாக படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, பண மதிப்பிழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்டவையே மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது.
இத்துடன், அடுத்த வருடம் அமலுக்கு வரவிருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியும், அதன் பங்காக வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, புதிய வாகனம் வாங்கும் மக்களின் முடிவில் இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற பல காரணங்களை நம்மால், தற்போதைய இந்திய ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலைக்கு கூறிக்கொண்டே செல்ல முடியும்.
ஆனால், இதனால் அவை சந்தித்து வரும் பின்விளைவுகள் எண்ணற்றவையாக இருக்கின்றன. எனவே, அத்தகைய மந்தநிலையில் தப்பித்துக்கொள்ளும் விதமாக, இந்தியாவில் இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், உற்பத்தி எண்ணிக்கையைக் குறைத்தல், தற்காலிக பணியாட்களை வெளியேற்றுதல் மற்றும் ஆலை செயல்பாட்டை தற்காலிகமாக முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி, இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீட்டை தள்ளிப்போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சுஸுகி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் பெற்றிருந்தது.
இருப்பினும், இந்நிறுவனம் தற்போதைய இந்திய ஆட்டோமொபைல்துறையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, அதன் புதிய உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனால், இந்தியாவில் அந்நிறுவனம் செய்யவிருந்த முதலீடு கை நழுவி சென்றுள்ளது. மேலும், பலருக்கு கிடைக்கவிருந்த வேலை வாய்ப்பும் விலகிச் சென்றுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல்துறையின் சூழல் இந்தளவிற்கு ரண களத்தில் இருக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியா வாகனத்துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் மற்றும் மெட்ரோ ரயில்களே காரணம்" என தெரிவித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 100நாள் சாதனைகளை விளக்கும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறை சரிவிற்கு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் கூறிவிட முடியாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போது உள்ள இளைஞர்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக பொது வாகனங்களை பயன்படுத்தும் இந்த சரிவிற்கு காரணம்" என தெரிவித்தார்.
மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட காலமாக வைத்து வரும் கோரிக்கையான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து கேள்விக்கு, தன்னால் இப்போது எதுவும் கூற முடியாது என கூறினார். அமைச்சரின் இந்த பதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு உச்சபட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதனை 18 சதவீதமாக குறைப்பதே மக்கள் மத்தியிலும் சரி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்தியிலும் சரி நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது.
இந்த நிலையில், வருகின்ற 20ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடைபெற இருக்கின்றது. இதில், எரிபொருள் வாகனங்கள் மீதான வரிகுறைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பிற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தவமிருப்பதைப் போன்று காத்துக் கொண்டிருக்கின்றன.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?