Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதையில் இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது.. ஹெல்மெட் அணியாவிட்டாலும்தான்.. அசத்தல் டெக்னாலஜி
வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ பைக் ஸ்டார்ட் ஆவதை தடுக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம் ஒன்றை மாணவ, மாணவிகள் குழு கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்வது கவலையளிக்கும் வகையில் உள்ளது. சாலை விபத்துக்களால் அதிகம் உயிரிழப்பது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். இரு சக்கர வாகனங்களை குடிபோதையில் இயக்குவது மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது ஆகிய காரணங்களால்தான் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க காவல் மற்றும் போக்குவரத்து துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் நின்று விடாமல், குடிபோதையில் வாகனங்களை இயக்கும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எதற்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தடுப்பதுடன், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதையும் தடுக்கும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றை, பெங்களூரை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் குழு கண்டறிந்துள்ளது. 4 பேர் அடங்கிய அந்த குழு இந்த பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக ஹெல்மெட் ஒன்றை கண்டறிந்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் மிகுந்த இந்த ஹெல்மெட், இரு சக்கர வாகனத்தின் இக்னீஷன் சிஸ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
எம்விஜே இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த சாய் வெங்கட், நிகிதா, மேகா மற்றும் சுவ்ரா ஆகிய நான்கு பேரும்தான், இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை கண்டறிந்துள்ளனர். வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆவதை இந்த தொழில்நுட்பம் தடுக்கிறது.
இந்த ஹெல்மெட்டில் சென்சார் ஒன்று இடம்பெற்றுள்ளது. பீரீத்லைசர்களில் (Breathalysers) பயன்படுத்தப்படும் சென்சார்களை போன்றதுதான் இதுவும். இது தவிர டச் சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது சென்சார் ரைடரின் சுவாசத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஆல்கஹால் அளவை கண்டுபிடித்து விடும். இரண்டாவதாக வழங்கப்பட்டுள்ள டச் சென்சாரானது, ஸ்கின் கான்டாக்ட் மூலமாக ரைடர் உண்மையில் ஹெல்மெட் அணிந்துள்ளாரா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடும். இந்த தகவல்கள் அனைத்தும் ப்ளூடூத் மூலமாக வாகனத்திற்கு கடத்தப்படும்.
இவ்வாறு பெறப்படும் தகவல்களை பொறுத்தே ஸ்டார்ட் ஆகலாமா? அல்லது வேண்டாமா? என்ற உத்தரவு வாகனத்தின் இக்னீஷன் சிஸ்டத்திற்கு கிடைக்கும். ஒருவேளை ரைடர் குடிபோதையில் இருந்தாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ இக்னீஷன் சிஸ்டத்திற்கு சிகப்பு கொடிதான் காட்டப்படும். அனைத்தும் சரியாக இருந்தால் பச்சை கொடிதான். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுபோன்ற தொழில்நுட்பங்களை பெரும் அளவில் நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சிரமமான காரியம் எல்லாம் கிடையாது. ஆட்சியாளர்கள் மனது வைத்தால் அனைத்தும் சாத்தியமே. ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து இது போன்ற தொழில்நுட்பங்களை பெரும் அளவில் நடைமுறைக்கு கொண்டு வந்தால், இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!