Just In
- 57 min ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 2 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 7 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 7 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்
ட்ரையம்ஃப் சூப்பர் பைக் உரிமையாளர்களுக்கான முதல் பந்தய கள பயிற்சி முகாம் வரும் 26ந் தேதி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் நடக்க இருக்கிறது.
ட்ரையம்ஃப் பைக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்கும், தனது பைக் மாடல்களின் திறனை முழுமையாக உணரும் விதத்தில் பந்தய கள பயிற்சி முகாம்களை சர்வதேச அளவில் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தனது இந்திய வாடிக்கையாளர்களும் பந்தய களத்தில் தங்களது பைக்குகளின் திறனை முழுமையாக பரிசோதித்து உணர்ந்து கொள்வதற்கான பயிற்சி முகாமை முதல்முறையாக நடத்த இருக்கிறது.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் வரும் 26ந் தேதி இந்த பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், ஸ்பீடு ட்ரிப்பிள் மற்றும் டேடோனா ஆகிய பைக் மாடல்கள் உரிமையாளர்கள் பங்கு கொள்ள முடியும்.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று தங்களது சூப்பர் பைக்கை இலகுவாக ஓட்டுவதற்கான நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ட்ரையம்ஃப் உரிமையாளர்கள் பெறுவர். இதற்கு கட்டணமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 35 பேர் மட்டுமே முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் 25ந் தேதி வரை ட்ரையம்ஃப் உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
ஜேகே டயர் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், ராஜ்புத்னா கஸ்டமைஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் சிங் பயிற்றுனராக கலந்து கொண்டு ட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு ட்ரையம்ஃப் நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!