Just In
- 22 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- Movies அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தலை மீது லாரி ஏறியும் உயிர் தப்பிய வாலிபர்: அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்
நாக்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி கீழே விழுந்த வாலிபரின் தலை மீது லாரி டயர் ஏறியும் அவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து மேலும் பார்க்கலாம்.
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 2015ம் ஆண்டில் நீதிபதி கருணாகரன் உத்தரவிட்ட பின்பு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பாக பல்வேறு
தீர்ப்புகளும், சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் பெரிய அளவில் நீண்ட காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாடு முழுவதும் ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. தமிழகத்திலும் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என சமீபத்தில் போலீசார் கூறி இதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் போதுவதற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஹெல்மெட் போடுவதால் வரும் சில பிரச்னைகள் தான். பெரும்பாலானோருக்கு ஹெல்மெட் போடுவதால் முடிக்கொட்டுதல், பொடுகு பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனாலேயே பலர் ஹெல்மெட்டை போட மறுக்கின்றனர்.
ஆங்காங்கே சிலர் விதிகளை மீறி வருகின்றனர். விதிகளை மீறுபவர்களுக்கு டிராபிக் போலீசார் அபாரதம் விதித்தாலும் சிலர் லஞ்சம் வழங்கியும், தங்கள் செல்வாக்கு மூலமும் தப்பி விடுகின்றனர். காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என பல செல்வாக்கான இடத்தில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தி ஆபராதத்தில் இருந்து தப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி கீழே விழுந்த வாலிபர் ஹெல்மெட் அணிந்ததால் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நாக்பூர் அருகே நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவினை நாக்பூர் போக்குவரத்து துணை ஆணையர் ராஜ் திலக் ரோசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவ்வீடியோ பதிவில் தனக்கு முன்னாள் சென்று கொண்டிருக்கும் லாரியினை வலதுபுறமாக வாலிபர் ஒருவர் கடக்க முயல்கிறார். அப்போது நடைபாதையில் பைக் உராய்ந்து தடுமாறி லாரியின் பின் சக்கரம் அருகே வாலிபர் கீழே விழுகிறார்.அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி செல்கிறது. அருகே வாகனங்களில் செல்லும் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
ஆனால் அந்த வாலிபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஹெல்மெட் மட்டும் சேதாரமாகி வாலிபர் உயிர் தப்பினர் லாரி தலை மீது ஏறிய சில நிமிடங்களில் அவர் மெதுவாக எழுத்து அருகில் உள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்தார். இந்த விபத்தில் வாலிபர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட்களின் முக்கியத்துவம் குறித்து பலர் அறிவது இல்லை. பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதுதான் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம். ஹெல்மட் போடாமல் செல்பவர்கள் அல்லது ஹெல்மட்டினை அலட்சியம் செய்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும் என கருதப்படுகிறது.
Watch how Helmet helped him#roadsafety pic.twitter.com/cL1tpYK6XZ
— Raj Tilak Roushan, IPS (@rtr_ips) January 10, 2019