Just In
- 2 hrs ago 31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
- 12 hrs ago பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- 14 hrs ago வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
- 18 hrs ago ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த குழந்தை கடத்தல்.. 4 மணிநேரத்தில் மீட்டது எப்படி? ஹீரோவான 2 ஆட்டோ டிரைவர்கள்!
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- Technology புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி.. எதற்காக இப்படி செய்தார்..?
கணவனுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் வகையில் இளம்பெண் ஒருவர் ஆச்சரிய பரிசை வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவலை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம் என்பார்கள். இதனை நிரூபிக்கின்ற வகையில் ஓர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில், ஓர் இளம்பெண் அவரது கணவருக்கு இன்பதிர்ச்சி அளிக்கின்ற வகையில் ஆச்சரிய பரிசை ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், வாகன பதிவெண்ணைக் கொண்டு பார்க்கையில் யூனியன் பிரதேசமான கோவாவில் நடைபெற்றிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
இந்த வீடியோவில், இந்திய இளைஞர்களின் ஆவலைத் தூண்டியுள்ள ஜாவா நிறுவனத்தின் கிளாசிக் பைக்கை பரிசாக வழங்குவதைப் போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் மற்றுமொரு பிராண்டாக செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜண்ட்ஸின்கீழ், ஜாவா நிறுவனம் மீண்டும் இந்தியாவில் களமிறங்கியுள்ளது. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் களமிறங்கிய இந்நிறுவனத்திற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.
இந்நிலையில், தனது கணவருக்காக ஏற்கனவே புக் செய்திருந்து ஜாவா கிளாசிக் பைக்கை, தற்போது டெலிவரி பெற்ற இளம்பெண், அதனை ஆச்சரிய பரிசாக வழங்கியுள்ளார்.
இதற்காக, தனது கணவரை சொந்த ஊரில் இருந்து அழைத்து வந்த அவர், கோவாவின் முக்கியமான தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து, அதில் தங்கி இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
கணவருக்கு மிகவும் பிடித்தமான ஜாவா கிளாசிக் பைக்கை, தங்கும் விடுதிக்கே வரவழைத்த அவர், தனது கணவர் எளிதில் பார்த்திடாத வண்ணம் கண்களை கை குட்டையால் மூடியவாறும், அதனை விடுதியின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினார்.
பின்னர், தனது உறவினர்களின் உதவியுடன் அவரை வெளியே அழைத்து வந்த இளம்பெண், கணவரின் கண்களை அடைத்தவாறே பைக்கிற்கு அருகில் அழைத்துச் சென்று ஆச்சரிய பரிசாக அதனை வழங்கினார்.
முன்னதாக இதுபோன்று ஆச்சரிய பரிசு வழங்குவதைப் போன்ற இணையத்தில் வெளியாகியதை நாம் கண்டிருப்போம். ஆனால், இது அவற்றைக் காட்டிலும் வித்தியாசமாக காணப்படுகின்றது. இதற்கு அந்த இளம்பெண் நடந்து விதமும், கணவருக்கு பரிசாக பைக்கை வழங்குவதில் காட்டிய ஆர்வமும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று, ஆச்சரிய பரிசை அளிக்கும் மனைவிகள் மட்டுமே இறைவன் கொடுக்கும் வரமல்ல. கணவனின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல், அவரை தாங்கும் எந்தவொரு துணைவியாரும் இறைவன் கொடுக்கும் வரம்தான்.
தற்போது, கணவருக்கு ஆச்சரிய பரிசை வழங்கியுள்ள அப்பெண், ஓர் யுடியூப் தளத்தை நிர்வகித்து வருகின்றார். 'ஓம் மற்றும் குடும்பத்தாரின் கிராம வாழ்க்கை நேரலையாக' என்ற பெயரில் இயங்கும் அந்த சேனலில், கிராமத்தைப் பற்றிய சிறப்பு தகவல் மற்றும் கிராமத்தார்களின் சிறப்பான வாழ்க்கை முறைகுறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஜாவா பைக் இந்தியாவில் ரூ. 1.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த பைக்கில் 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான் ஜாவா42 மாடலிலும் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இதில், எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்கின்றதோ, இல்லையோ. ஆனால், ஒவ்வொரு திருமணமாகாத இளைஞர்களின் மிகப்பெரிய வேண்டுதலாக, அவர்களின் வருங்கால துணைவியாரைப் பற்றியதாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.