Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 2 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 2 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- News குரங்கு சேட்டை பண்ண முடியாது..பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த கோர்ட்..! பஸ்களில் இனி தானியங்கி கதவு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
128கிமீ வேகத்தில் சென்ற யமஹா ஆர்15 பைக்: குறுக்கே வந்த இருபெண்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
அதிவேக பயணம் ஆபத்து என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மனதை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
மக்கள் தொகை, வருமை, வேலையில்லா திண்டாட்டம் இவையனைத்திலும் எப்படி இந்தியா முதன்மை வகிக்கின்றதோ, அதேபோன்றுதான், வாகன பயன்பாட்டிலும் இந்தியா முன்னணி இடத்தைப் பிடித்திருக்கின்றது.
அந்தவகையில், ஆட்டோமொபல் துறையில் இந்தியா உலகிலேயே நான்காவது இடத்தைப் பிடத்திருக்கின்றது. இது கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் கிடைத்த தகவலாகும்.
இது தற்போது அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஏனென்றால், கடந்த சில வருடங்களாக பெரும்பாலான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு, அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.
அவ்வாறு, உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான, ஃபெர்ராரி, அஸ்டான் மார்டின், டுகாட்டி மற்றும் எம்வி அகஸ்டா உள்ளிட்ட நிறுவனங்கள், அதன் விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள்மூலம் இந்தியர்களுக்கு விருந்தளித்து வருகின்றன.
ஆனால், இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் இந்தியச் சாலைகளுக்கு ஏற்பவையாக இல்லை என்பதே, நிதர்சணமான உண்மை.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் உருக்குலைந்து, பள்ளம் மேடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. மேலும், சில சமயங்களில் ஆடுகள், மாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.
அதிலும், மிக முக்கிய தலைவலியாக ஜே வால்கர்ஸ் எனப்படும், பாதசாரிகளாலேயே பல்வேறு பிரச்னைகளை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர்.
இதன்காரணமாகவே, வாகன ஓட்டிகள் எப்போதும் மிதமான வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனென்றால், இந்தியச் சாலைகளில் எப்போது பள்ளம் மேடு வரும், எப்போது மனிதர்கள் குறுக்கிடுவார்கள் என்பதே தெரியாது.
அதுபோன்ற, நேரங்களில் அதிகவேகம் என்பது, வாகன ஓட்டிக்கும் சரி, எதிர்புறத்தில் வருபவர்களுக்கும் அது ஆபத்தாக இருக்கின்றது.
இந்நிலையில், இத்தகையை ஓர் ஆபத்தான சம்பவம்தான் அண்மையில் நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும், மனதை உறைய வைக்கின்ற அளவிலான வீடியோ ஒன்றை கல்லிவந்தர்07 என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
அதில், யமஹா ஆர்15 வி3 பைக் அதிவேகமாக நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, பைக் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது, அதைப் பார்க்காத இரு பெண்கள் மிகப் பொருமையாக சாலையைக் கடக்கின்றனர்.
அப்போது, ஒரு பெண் மட்டும், நடுவழியிலேயே தங்கிவிட, மற்றுமொரு பெண் முன்னேறி சென்றுவிடுகிறார். இவையனைத்தும், கண்ணிமைக்கும் நேரத்தில், நடந்துவிடுவதால், இளைஞரால் பைக்கைக் கட்டுபடுத்த முடியவில்லை. மேலும், அந்த யமஹா பைக் இருவருக்கும் இடையே நுழைந்தவாறு செல்கின்றது.
பைக் சீறிப்பாய்ந்து வந்த வேகத்தில், அவர்கள்மீது மோதியிருந்தால், பெரும் அசாம்பாவிதம் ஏற்பட்டிருக்கு. ஆனால், அதிர்ஷ்டவசமாக, பைக்கரும் அந்த பெண்களும் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம், இரு சக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, அனைத்து வாகன ஓட்டிகளும் முறையான, வரையறுக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது.
பொதுவாக, இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகள் சில, மணிக்கு 80 கிமீ வேகத்தையும், மணிக்கு 120 கிமீ வேகத்தையும் அங்கீகரிக்கின்றது.
ஆனால், அவையனைத்தும் ஆபத்து குறைந்த சாலைகள் என்று கூறிவிட முடியாது. அவ்வாறு, வேகமாக செல்லும்போது, வாகன ஓட்டிகளே, அவர்களைக் காத்துக்கொள்ளும் விதமாக, அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதையும் போக்குவரத்துத்துறை வலியுறுத்துகின்றது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதே இல்லை. இதன்காரணமாகவே, அதிகளவிலான விபத்துகளை இந்திய சாலைகள் சந்தித்து வருகின்றன.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நீங்கள் எவ்வளவு பெரிய வித்தை தெரிந்த டிரைவராக இருந்தாலும் சரி, நீங்கள் பயன்படுத்துவது எவ்வளவு பாதுகாப்பு திறன் வாய்ந்த வாகனமாக இருந்தாலும் சரி, கணிக்க முடியாத சூழ்நிலையில், எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
ஆகையால், இதுபோன்ற சூழ்நிலைகளில் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பான பிரேக்கிங்கை வழங்கும்விதமாக நாட்டில் விற்பனையாகும், அனத்து 125 சிசி திறனுக்கும் அதிகமான எஞ்ஜின் திறனைக் கொண்ட வாகனங்களில் ஆன்டி லாக் பிரேக்கிங் எனப்படும் ஏபிஎஸ் வசதி இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அம்சமானது, தற்போது நிகழ்ந்திருப்பதைப்போன்ற சம்பவங்களில் சிறப்பான பிரேக்கிங் திறனை வாகனத்திற்கு வழங்கும். ஆகையால், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் எனப்படும் இரு வகையிலான வசதியை கட்டாயம் வாகனங்களில் நிறுவ வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!