Just In
- 1 hr ago
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- 2 hrs ago
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
- 4 hrs ago
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- 5 hrs ago
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
Don't Miss!
- Movies
பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்!
- News
டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்!
- Finance
உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..!
- Lifestyle
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா? அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...
- Sports
உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே?.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னங்க சொல்றீங்க, மீண்டும் வருகின்றனவா யெஸ்டி பைக்குகள்? கதிகலங்கும் ராயல் என்பீல்டு
3 புதிய பைக்குகளுடன் யெஸ்டி பிராண்ட்டை மீண்டும் புத்துயிர் பெற வைக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் கடந்த 2018 நவம்பரில் ஜாவா பிராண்டை இந்தியாவில் மீண்டும் கொண்டுவந்து தற்போது கணிசமான விற்பனைகளை பெற்று வருகிறது. ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் ராயல் என்பீல்டின் விலை குறைவான மாடல்களுக்கு போட்டியாக விளங்கி வருகின்றன.

அதேசமயம் பெராக் பாப்பர் கவர்ச்சிகரமான விலையினால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது. ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், தனது பணியினை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் குறைத்து கொண்டதினால், ஜாவா பெராக் கடந்த 2019 இறுதியில் இருந்து தான் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது.

இதனாலும், கொரோனா வைரஸினாலும் கடந்த 2 வருடங்களில் 50,000-க்கும் அதிகமான ஜாவா மோட்டார்சைக்கிள்களையே இந்நிறுவனத்தால் விற்க முடிந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மிக குறைவான காலத்தில் எட்டிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் தற்போது ஜாவா பிராண்டை தொடர்ந்து யெஸ்டி பிராண்டையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யெஸ்டி பிராண்டில் இருந்து மூன்று புதிய பைக்குகள் இந்திய சந்தையில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும் அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளன.

இதன் காரணமாக யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரிகளை 2021 பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இருந்தோ அல்லது மார்ச் மாதத்தில் இருந்தோ துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் இந்த 2020 நவம்பர் மாத இறுதியிலோ அல்லது அடுத்த டிசம்பர் மாதத்திலோ கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகலாம்.

இந்திய சந்தையில் ரெட்ரோ மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், யெஸ்டி போன்ற புதிய மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள் நுழைவதற்கு இதுவே சரியான தருணம். என்ஜின் மற்றும் ப்ளாட்ஃபாரத்தில் ஜாவாவிற்கும் யெஸ்டிவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் கொண்டுவரப்படாது என கூறப்படுகிறது.

அதேபோல் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் ஜாவா டீலர்ஷிப் மையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த சமயத்தில் யெஸ்டி பிராண்டில் இருந்து ரோட் கிங், ஆயில் கிங், கிளாசிக், சிஎல்-II, மோனார்ச், டீலக்ஸ், 350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன.

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய ஆரம்ப நிலை மீட்டியோர்350 பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஹோண்டா அதன் எச்'னெஸ் சிபி350 பைக் மூலமாக வாடிக்கையாளர்கள் கவர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பழைய மோட்டார்சைக்கிள் பிராண்ட் யெஸ்டி களத்தில் இறங்கினால் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.