Just In
- 25 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 36 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா?
மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று சந்தையைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி. இந்த நிறுவனம், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முதலில் இந்த ஸ்கூட்டரை பெங்களூரு நகரத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.
இம்மாதிரியான சூழ்நிலையில் ஏத்தர் நிறுவனம், 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சென்னை விற்பனையை நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டுமின்றி பெங்களூரு நகரத்திலும் இந்த மின்சார ஸ்கூட்டரின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏத்தர் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு இன்றிலிருந்து (28 நவம்பர்) செயல்பாட்டிற்கு வருவதாக கூறப்படுகின்றது. ஏத்தர் நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை கடந்த 2018ம் ஆண்டே முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருந்தது. விற்பனைக்கு வந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக இது தற்போது விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஏத்தர் எனெர்ஜியின் இந்த அதிரடி முடிவிற்கு, நிறுவனத்தின் பிற மாடல்களான 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் ஆகிய மாடல்களுக்கு அமோகமான வரவேற்பு கிடைப்பதே காரணமாக அமைந்துள்ளது. ஆமாங்க, இந்த இரு மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இவற்றில் மட்டுமே கவனம் செலுத்த ஏத்தர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதனடிப்படையிலேயே ஏத்தர் 450 தற்போது விற்பனையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமானபோது, இதுவே இந்தியாவின் முதல் பிரீமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டராக இருந்தது. ஆனால், இதற்கு போட்டியளிக்கின்ற வகையில் சந்தையில் பல்வேறு மின்சார இருசக்கர வாகனங்கள் களமிறங்கியிருக்கின்றன.
450 மற்றும் 450 எக்ஸ் ஆகிய இரு மாடல்களும் ஒரே பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களாகும். ஆகையால் இவையிரண்டிற்கும் இடையே பெரியளவில் வித்தியாசத்தைக் காண முடியாது. இருப்பினும், ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் விஷயத்தில் 450 மாடல், 450 எக்ஸ் மாடலைக் காட்டிலும் பின் தங்கிய வாகனமாக இருக்கின்றது. இதுவும், 450 மாடல் தற்போது வெளியேற்றப்படுவதற்கான காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், விரைவில் இந்த மின்சார ஸ்கூட்டர் ஓடிஏ அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வரலாம் என ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் ஆகிய மாடல் மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையைத் துரிதப்படுத்தும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட இருக்கின்றது. ஏற்கனவே இவ்விரு மாடல்களும் நல்ல விற்பனை விகிதத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.
இத்துடன், தன்னுடைய சந்தையை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக, கோழிகோடு, ஹைதராபாத், புனே, மும்பை, டெல்லி, அஹமதாபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் மற்றுமொரு முக்கிய நகரமான கோயம்பத்தூரை ஏத்தர் தேர்வு செய்திருக்கின்றது. இதுதவிர, நாடு முழுவதும் 11 நகரங்களில் 135 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் பணியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.
ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டரை நீக்கிய கையோடு, புதிய திட்டத்தை ஏத்தர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ப்ரீ-ஓவ்ன் திட்டத்தை ஏத்தர் 450 வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்வேறு பலன்களை அவர்களால் அடைய முடியும்.