Just In
- 10 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 23 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 31 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ நிறுவனத்திடம் இருந்து பெரும் முதலீடு... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டை கலக்கப்போகும் ஏத்தர்
ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் புதிதாக ரூ.84 கோடியை முதலீடு செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கப்பட்ட ஏத்தர் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிக முதலீட்டை செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு 205 கோடியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலீடு செய்தது.
இதேபோல, பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சச்சின் பன்சால் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ளார். இந்த சூழலில், வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது ஏத்தர் நிறுவனம்.
பெங்களூர், சென்னையில் மட்டும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் விரைவில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் டீலர்களை நியமித்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்க இருக்கிறது.
வெளிநாடுகளுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வர்த்தகத்தை துவங்குவதற்கு ஏதுவாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வித்ததில், ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
இந்த நிலையில், வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்திற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதனை மனதில் வைத்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தில் புதிதாக ரூ.84 கோடியை முதலீடு செய்துள்ளது.
இதன்மூலமாக, ஏத்தர் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்த முதலீடு ரூ.400 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏத்தர் நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 34.58 சதவீதத்தை ஹீரோ கைவசப்படுத்தி உள்ளது.
இந்த புதிய முதலீடுகள் மூலமாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ளது. விரைவில் கோவை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.