Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சர்வதேச சந்தையில் கால் பதிக்கும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் சர்வதேச சந்தையில் கால் பதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் சிறந்த நிறுவனமாக பெயர் பெற்றுவிட்டது. பெங்களூர் மற்றும் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம் நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் படிப்படியாக வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
மேலும், உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் தனது ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு விற்பனையை துவங்கவும் முடிவு செய்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வலுவான சந்தை இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், இந்த நாடுகளில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக இருப்பதால் அங்குள்ள மக்கள் மின்சார வாகனங்களை எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டுள்ளது. மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறப்பான வரவேற்பு இருப்பதால் அங்கும் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், தனது ஸ்கூட்டர்களை அங்கேயே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வகையில், அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் அமைப்பதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, அந்தந்த நாடுகளின் தேவையை மிக எளிதாகவும், விரைவாகவும் பூர்த்தி செய்ய முடியும். விலையையும் சரியாக நிர்ணயிக்க இயலும்.
ஏத்தர் நிறுவனம் தற்போது ஏத்தர் 450 என்ற மாடலை விற்பனையில் வைத்துள்ளது. கவரும் டிசைன், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் அதி செயல்திறன் மிக்க இந்த ஸ்கூட்டர் மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட 450எக்ஸ் மாடல் கடந்த ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது நினைவிருக்கலாம்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!