Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாடு முழுவதும் பெரிய அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்க ஏத்தர் தீவிரம்
சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் ஏத்தர் நிறுவனம் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை வைத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகன உற்பத்தியில் ஜாம்பவான் நிறுவனங்களுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த ஏத்தர் நிறுவனம் தற்போது நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், வர்த்தகத்தை வலுவாக்கும் விதத்தில், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா,"முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஒவ்வொரு நகரத்திலும் 12 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறோம். டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 புதிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்துவிடுவோம்," என்று கூறி இருக்கிறார்.
சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. ஃபாஸ்ட் சார்ஜரிலிருந்து சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் தொழில்நுட்பத்துடன் எமது நிலையங்களை அமைப்பதற்கு முடிவு செய்தததால், இந்த தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இதனை 20 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
இது சாத்தியமானால், ஒரு நிமிடத்தில் 4 கிலோமீட்டர் பயணிப்பதற்கான சார்ஜை உரிமையாளர் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 முதல் 3,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களுடன் செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று தருண் மேத்தா கூறி இருக்கிறார்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு