Just In
- 59 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்!
பழைய இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் ஸ்கூட்டரை வாங்கும் திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தை CredR என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏத்தர் அமல்படுத்தப்பட உள்ளது. சென்னை, பெங்களூர் நகரங்களில் உள்ள ஷோரூம்களில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பழைய பெட்ரோல் இருசக்கர வாகனம் எந்த பிராண்டாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும். பைக், ஸ்கூட்டர்களின் கண்டிஷன் மற்றும் இதர அம்சங்களை ஆய்வு செய்து அதற்கு தக்கவாறு விலை நிர்ணயிக்கப்படும்.
புதிய ஏத்தர் 450 ப்ளஸ் மற்றும் 450எக்ஸ் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படுகிறது. புதிய ஏத்தர் ஸ்கூட்டரின் விலையில் எக்ஸ்சேஞ்ச் விலை கழித்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு குத்தகை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, மாதம் ரூ.2,589 கட்டணம் செலுத்த வேண்டும்.
அனைத்து விதமான செலவீனங்களும் இதில் அடங்கிவிடும் என்று ஏத்தர் தெரிவித்துள்ளது. மாதாந்திர திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை தரும் என்று ஏத்தர் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், விரைவில் கோவை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் ஏத்தர் ஈடுபட்டுள்ளது. கொரோனாவால் தள்ளிப் போன விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் வெளிநாடுகளுக்கும் ஏத்தர் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு