Just In
- 14 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 36 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
Don't Miss!
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உள்நாட்டில் பூஜ்யம்தான்... ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!
கொரோனா ஊரடங்கால் உள்நாட்டு விற்பனை பூஜ்யமாக பதிவான நிலையில், ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இழப்பை ஓரளவு சரி கட்டி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா பிர்சனை உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக, 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 17ந் தேதி வரை தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலால், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் முதல்முறையாக கடந்த மாதம் விற்பனை பூஜ்யமாக பதிவாகி உள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் தனது வரலாற்றில் மிக மோசமான தருணத்தை சந்தித்துள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை பூஜ்யமாக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், கடந்த ஏப்ரலில் 32,009 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,60,393 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிலையில், கடந்த மாதம் 5ல் ஒரு பங்கு அளவே ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால், பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது, ஏற்றுமதியில் ஓரளவு எண்ணிக்கையை ஆறுதல் பெற்றிருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். அதேபோன்று, கடந்த ஆண்டு 30,818 வர்த்தக வாகனங்கள ஏற்றுமதி செய்திருந்த பஜாஜ் ஆட்டோ, கடந்த மாதத்தில் 5,869 வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
ஏற்றுமதியில் கவனம் செலுத்தாத பிற நிறுவனங்களின் விற்பனை பூஜ்யமாகி தவித்து வரும் நிலையில், இந்த இக்கட்டான தருணத்திலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பொருளாதார இழப்பை இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி கூட ஓரளவு இழப்பை சரிகட்ட உதவி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்திலும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரிலும் வாகன உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ருத்ராபூர் ஆலை கடந்த மாதம் 20ந் தேதி முதலும் அவுரங்காபாத் ஆலை 24ந் தேதி முதலும் குறைந்தபட்ச இலக்குடன் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.