Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Movies விஜயகாந்துக்கு சொன்ன படி பத்மபூஷன் விருது வழங்காதது ஏன்? இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது இரு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதியை பெற்றுள்ளது. இதனால் மஹராஷ்டிரா, அவ்ரங்காபாத்தில் உள்ள இந்நிறுவனத்தின் வாலுஜ் தொழிற்சாலையிலும், உத்தரகாண்ட், ருத்ராபூரில் உள்ள தொழிற்சாலையிலும் விரைவில் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பஜாஜின் தயாரிப்பு பணிகள் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படியே மறு தொடக்கம் செய்யப்படவுள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கலாம் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த கட்டுப்பாடுகளில் தொழிற்சாலை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அடங்கும். இதனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து திறக்கப்பட்டுள்ள பஜாஜின் இந்த இரு தொழிற்சாலைகளும் இத்தகைய நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் பஜாஜ் நிறுவனம் அவ்ராங்காபாத்தில் உள்ள வாலுஜ் தொழிற்சாலை பணியில் ஈடுப்படுத்துவதற்காக 850 தொழிலாளர்களுக்கான அனுமதியை பெற்றுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் முதல் வேலையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஜாஜ் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கான க்னாக்டு-டவுன் கிட்ஸ் தயாரிக்கப்படவுள்ளன.
ஏனெனில் மற்ற நாட்டு சந்தைக்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் மூலமாக தற்போதைய பண தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என இந்நிறுவனம் கருதுகிறது. இந்த கருத்தை வெளிப்படுத்தும் விதமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சர்மா, தங்களது நிறுவனத்தின் ரூ.1000 மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்கள் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளார்.
பஜாஜ் நிறுவனம் அதன் மொத்த தயாரிப்பில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இத்தகைய ஏற்றுமதி வாகனங்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மற்ற தென்கிழக்கு ஆசிய நாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
பஜாஜ் நிறுவனத்தின் இரு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், இந்நிறுவனத்தின் பிரதான சாகான் தொழிற்சாலை குறைந்தது இம்மாத இறுதி வரையிலாவது மூடப்பட்டே இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏனெனில் முதலில் புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்திருந்த மஹாராஷ்டிரா அரசாங்கம் பிறகு தனது அறிவிப்பை வாபஸ் பெற்று கொண்டது.
இதனால் புனே நகராட்சி ஆணையர்களும், பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சிகளும் தங்களது பகுதிகளை ஏப்ரல் 27ஆம் தேதி வரை மூட உத்தரவை பிறப்பித்துள்ளன. தொழிற்சாலை பணியாளர்கள் நிறுவனத்தின் சொந்த முகாம்களில் தங்கியிருந்தால் மட்டுமே அதிகாரிகள் தொழிற்சாலையை திறக்க அனுமதியளிக்கின்றனர்.
இந்திய சந்தைக்கான பிஎஸ்6 வாகனங்களை தயாரிக்க இந்நிறுவனத்திடம் போதுமான சரக்குகள் இருப்பினும், தற்போதைக்கு பஜாஜ் நிறுவனம் வெளிநாட்டு வாகனங்களின் மீது தான் கவனம் செலுத்தவுள்ளது. மீண்டும் தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதால் பஜாஜ் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கினால் அடைந்திருந்த நஷ்டத்தை ஓரளவு சமாளிக்க முயற்சிக்கும் என்பது உறுதி.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!