Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க
சீனாவுக்கான ஆப்பை இந்தியா சீவிக் கொண்டிருக்கின்ற வேலைியில் பஜாஜ் நிறுவனத்தின் செய்கை மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதியான லடாக், கல்வான் பள்ளதாக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு நாட்டு வீரர்களிடையே கை களப்பு ஏற்பட்டது. இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்தியாவில் வீர மரணடைந்தோரின் எண்ணிக்கை 20 என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், சீனா தரப்பில் இருந்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அதேசமயம், ஏஎன்ஐ தளம் வெளியிட்ட தகவலின்படி சீன வீரர்களின் பலி எண்ணிக்கை 50க்கும் அதிகம் என தெரிகின்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை காரணமாக இரு நாட்டு வீரர்களும் அவரவர்களின் முகாம்களுக்கு திரும்பினர்.
ஆனாலும் மக்கள் பலர் இந்த கசப்பான அனுபவத்தை மறக்காமல், கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். இதன் விளைவாக 'பாய்காட் சீனா புராடெக்ட்' எனும் மந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். அதாவது, சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷத்தை முழங்க தொடங்கியிருக்கின்றனர். சமூக வலைதளம் முதல் ஸ்டேட்டஸ் வரை இதே முழக்கமாக காட்சியளித்து வருகின்றது.
இதைத்தொடர்ந்து, ஒரு சில நிறுவனங்களும்கூட சீன தயாரிப்புகளை இனி கொள்முதல் செய்யப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டன. இதேபோன்று, மஹாராஷ்டிரா மாநில அரசு அம்மாநிலத்தில் சீன நிறுவனங்கள் மூலம் வாகனத்துறையில் செய்யப்பட இருந்த ரூ. 5,020 கோடி முதலீட்டுக்கு தடை விதிக்க முடிவெடுத்துள்ளது. இதனை மத்திய அரசுடன் ஆலோசித்த பின்னரே எடுத்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு, மக்கள் சார்பிலும், சில நிறுவனங்கள் (வாகன உற்பத்தி நிறுவனங்களும் அடங்கும்) சார்பிலும் எதிர்ப்புகள் மிகப்பெரிய அளவில் வலுத்து வரும் நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கான பேட்டரிகள் சீனாவில் இருந்து வரத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அந்த ஸ்கூட்டரின் உற்பத்தியும் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூடுதல் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உலக நாடுகளைக் காட்டிலும் சீனாவில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கப் பெறுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பாகங்கள் மட்டுமில்லாமல் ப்யூவல் வாகனங்களுக்கான பாகங்களும் இங்குதான் சற்று குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மலிவு விலை வாகனங்களை இந்தியாவில் களமிறக்க முடியும். அதேசமயம், பஜாஜ் நிறுவனம் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கான பேட்டரிகளை நேரடியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிறுவனம், அதன் கூட்டாளர்களின் மூலமாகவே இதனை வாங்கி பயன்படுத்துகின்றது.
கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியதில் இருந்த இந்த பேட்டரிகளின் இறக்குமதி தற்காலிக தடையைப் பெற்றிருந்தது. தற்போது, இந்த வைரசின் தாக்கத்தில் இருந்து உலகம் மெல்ல மெல்ல விடிவு காலம் பெற்றுவருவதை அடுத்து நிறுவனங்கள் அனைத்தும் இயங்க ஆரம்பித்துள்ளன. இதனடிப்படையிலேயே தற்போது பஜாஜ் சேத்தக்கிற்கான பேட்டரிகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
எனவே, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி தொடக்கத்தை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டிருக்கின்றது.
பஜாஜ் நிறுவனம் அதன் பிரபல மாடலான சேத்தக் ஸ்கூட்டருக்கு உயிரளிக்கும் விதமாகவே எலெக்ட்ரிக் வெர்ஷன் தோற்றத்தை அதற்கு வழங்கியது. இந்த ஸ்கூட்டர் தற்போது நாட்டின் ஒரு சில முக்கியமான நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதாவது, அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இது நாட்டின் விலையுயர்ந்த பிரிமியம் ரக மின்சார ஸ்கூட்டராகும். இதில், ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான வண்ண தேர்வில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மின்சார ஸ்கூட்டர் கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!