Just In
- 32 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!
பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினால், தானியங்கி முறையில் உதவி கோரும் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் பல இடங்களில் ஆலைகளை அமைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு முக்கிய உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது.
மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கண்டறிவதிலும் இந்த நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது கார்கள் விபத்தில் சிக்கினால், உடனடியாக அருகிலுள்ள அவசர மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையில் பல கார்களில் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இதே தொழில்நுட்பத்தை பைக்குகளிலும் பயன்படுத்தும் வசதியை பாஷ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பமானது பைக்கின் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். அதாவது, பைக் செல்லும் திரை, கோணம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கும். வினாடிக்கு 100 முறை பைக்கின் கோணம் குறித்த தகவல்களின் அடிப்படையில், பைக் நிலையாக செல்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும்.
ஒருவேளை பைக் கீழே விழுந்து விட்டால், உடனடியாக அருகிலுள்ள அவசர உதவி மையத்திலிருந்து உதவி கோருவதற்கான வாய்ப்பை தானியங்கி முறையில் பாஷ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் வழங்கும். பைக்கிலிருந்து முதலில் பாஷ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் செல்லும்.
அங்கிருந்து பைக்கில் இருக்கும் ஜிபிஎஸ் மூலமாக அந்த இடத்திற்கு அருகிலுள்ள பாஷ் சர்வீஸ் மையம் அல்லது அங்குள்ள அவசர உதவி மையத்தின் மூலமாக பைக் ஓட்டுனர் இருக்கும் இடத்திற்கு மீட்புப் படையினர் சென்று மீட்க முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் ஹெல்ப் கனெக்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியை சேர்ந்த பைக் உரிமையாளர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பாஷ் முதல்கட்டமாக வழங்க உள்ளது.
இருப்பினும், ஜெர்மனிக்கு வெளியில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஐயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக் உரிமையாளர்கள் சென்றாலும் இந்த உதவியை பெற முடியும்.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்