Just In
- 7 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!
பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினால், தானியங்கி முறையில் உதவி கோரும் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் பல இடங்களில் ஆலைகளை அமைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு முக்கிய உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது.
மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கண்டறிவதிலும் இந்த நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது கார்கள் விபத்தில் சிக்கினால், உடனடியாக அருகிலுள்ள அவசர மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனையில் பல கார்களில் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இதே தொழில்நுட்பத்தை பைக்குகளிலும் பயன்படுத்தும் வசதியை பாஷ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பமானது பைக்கின் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். அதாவது, பைக் செல்லும் திரை, கோணம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கும். வினாடிக்கு 100 முறை பைக்கின் கோணம் குறித்த தகவல்களின் அடிப்படையில், பைக் நிலையாக செல்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும்.
ஒருவேளை பைக் கீழே விழுந்து விட்டால், உடனடியாக அருகிலுள்ள அவசர உதவி மையத்திலிருந்து உதவி கோருவதற்கான வாய்ப்பை தானியங்கி முறையில் பாஷ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் வழங்கும். பைக்கிலிருந்து முதலில் பாஷ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் செல்லும்.
அங்கிருந்து பைக்கில் இருக்கும் ஜிபிஎஸ் மூலமாக அந்த இடத்திற்கு அருகிலுள்ள பாஷ் சர்வீஸ் மையம் அல்லது அங்குள்ள அவசர உதவி மையத்தின் மூலமாக பைக் ஓட்டுனர் இருக்கும் இடத்திற்கு மீட்புப் படையினர் சென்று மீட்க முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் ஹெல்ப் கனெக்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியை சேர்ந்த பைக் உரிமையாளர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பாஷ் முதல்கட்டமாக வழங்க உள்ளது.
இருப்பினும், ஜெர்மனிக்கு வெளியில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஐயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக் உரிமையாளர்கள் சென்றாலும் இந்த உதவியை பெற முடியும்.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!