Just In
- 3 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 5 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 10 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 12 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- News 320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி
- Movies தக் லைஃப் பட ஷூட்டிங்.. சிம்புவை பார்த்து ஆடிப்போன மணிரத்னம்.. அப்படி என்ன நடந்தது?
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கம் இப்போ வாங்கலாமா..?
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேமிராவின் கண்களில் சிக்கிய சைலென்சர் இல்லா பர்க்மேன் ஸ்கூட்டர்... ஆவலை எகிர செய்யும் புகைப்படங்கள்!!
சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்கூட்டர் சைலென்சர் இன்றி கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. நாட்டின் இந்த நிலையை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புது முக மின் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.
அந்தவகையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகியும் அதன் மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் பர்க்மேன் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருகின்றது. இதையே விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்ப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் வைத்து பல பரீட்சையில் சுசுகி நிறுவனம் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு, சுசுகி பர்க்மேன் மின்சார ஸ்கூட்டர் சாலையில் பல பரீட்சையில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. இதனை இந்தியன் ஆட்டோ பிளாக் தளம் வெளியிட்டிருக்கின்றது.
ஸ்பை செய்யப்பட்டிருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டர் வெள்ளை மற்றும் நீலம் ஆகிய ட்யூவல் டோன் நிறத்தில் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக், ஏத்தர் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு இந்த பர்க்மேன் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டர் போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் சைலென்சர் இல்லாததை வைத்தே, இது மின்சார ஸ்கூட்டர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுசுகி நிறுவனத்தின் சற்று விலையுயர்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக பர்க்மேன் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இதனடிப்படையில் மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருப்பதால் இது விற்பனைக்கு வரும்போது சற்று விலையுயர்ந்த பிரீமியம் ரக மின்சார ஸ்கூட்டராக சந்தைக்கு வரலாம் என யூகிக்கப்படுகின்றது.
இந்த மின்சார ஸ்கூட்டரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் பேட்டரிகள் இடம்பெற இருக்கின்றன என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், சந்தையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களில் ப்ளூடுத் இணைப்பு, நேவிகேஷன், ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் கிடைக்கின்றன.
இவற்றுடன் பர்க்மேன் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டர் போட்டியிட இருப்பதால் இதிலும் மேற்கூறிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கூடுதல் சில சிறப்பம்சங்கள் கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது, அதிக ரேஞ்ஜ் மற்றும் 4ஜி இன்டர்நெட் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
விலை மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் பர்க்மேன் மின்சார ஸ்கூட்டர்களின் புகைப்படம் சுசுகி நிறுவனத்தின் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆவலைத் தூண்டியிருக்கின்றது.
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
-
இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
-
தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!