Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
தீவிரமாக பரவும் வரைஸ்! அச்சத்தில் மக்கள்! நம்பிக்கையை விதைக்க புதிய தந்திரத்தை கையாளும் எடப்பாடியார்
காட்டுத் தீயை போல் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரசைக் கட்டுபடுத்த புதிய தந்திரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையாண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது உயிர் கொல்லி கொரோனா வைரஸ். எனவேதான் அனைத்து நாடுகளும் இந்த வைரசுக்கு தற்போது வில்லனாக மாறியிருக்கின்றன.
அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனாவை தீர்த்துக்கட்டுகின்ற முயற்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு, சென்னையின் தற்போதைய நிலைய முக்கிய காரணமாக உள்ளது. இங்கு கடந்த காலங்களில் இல்லாத வகையில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகின்றது. கடந்த ஒரு சில வாரங்களாக வைரசால் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்து வண்ணமே வருகின்றது. இதனால், கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளது. எனவே, அரசும், மக்களும் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகையால், வைரசை ஒழித்துக் கட்டும் பணயில் முன்பெப்போதும் அளவில் மிகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது தமிழக அரசு. இது மேற்கொண்டு வரும் முயற்சிகளை பார்த்தால் கொரோனாவிற்கு எதிரான போர் சூடுபிடித்துள்ளது என்றே கூறலாம். அந்தளவிற்கு அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை தமிழக அரசு எடுத்து வருகின்றன.
இதனடிப்படையில், கொரோனா தடுப்பு பணிக்காக ரூ. 1.36 கோடி செலவில் புதிதாக 25 ராயல் என்பீல்டு பைக்குகளை தமிழக அரசு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பைக்குகள் அனைத்தும் கொரோனா தடுப்பு பணிக்காக மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கான மாற்றங்களையும் அந்த பைக்கில் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
அதாவது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சந்து பொந்து என அனைத்து பகுதிகளிலும் புகுந்து கிருமி நாசினி மற்றும் மருந்துகளை தெளிப்பதற்கு ஏதுவான மாடிஃபிகேஷன்களுடன் அந்த பைக் வாங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையை சுத்தம் செய்யும் பணியில் இந்த பைக்குகள் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.
இதற்கான 9 பைக்குகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜூன் 5) முதற்கட்டமாக பச்சை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இவை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் இணைந்து பணியாற்ற இருக்கின்றன.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையிடம் ஏற்கனவே 35 மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றுடன், தற்போது புதிதாக வழங்கப்பட்டிருக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளும் இணைந்து பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட இருக்கின்றன.
ஆனால் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்குகளில் கொரோனா வைரசை கையாள்வதற்கான வசதிகளே ஏராளமாக காணப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட பைக்குகளில் இதுமாதிரியான அம்சங்கள் பெரியளவில் இடம் பெறவில்லை.
குறிப்பாக, பெரிய டேங்க் போன்ற அமைப்பு மற்றும் ஸ்பிரேக்களை தாங்கிச் செல்வதற்கான வசதி உள்ளிட்டவை கவனிக்கதக்கதாக உள்ளது. இந்த அம்சம்தான் சாலையில் சென்றுக் கொண்டே மருந்தை தெளிக்கவும் உதவ இருக்கின்றன.
இதற்கான மாற்றத்தையும், சிறப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை அந்த பைக்குகள் ஏராளமாக கொண்டிருப்பதால் அது என்ன மாடல் என்பதை யூகிப்பதே மிக கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
ஆகையால், எங்களால் அது என்ன மாடல் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு பைக்கிற்கும் சிறப்பு மாற்றத்தின் காரணமாக ரூ. 5.5 லட்சத்தை தமிழக அரசு செலவு செய்திருக்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் 25 பைக்குகளை வாங்க ரூ. 1.36 கோடி செலவாகியுள்ளது.
இது பைக்கை வாங்க மட்டுமல்ல அதில் பொருத்தப்பட்டிருக்கும் கொரோனா ஒழிப்பு உபகரணத்திற்கானதும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்தமாதிரியான சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலை தமிழக அரசும், ராயல் என்பீல்டு நிறுவனமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஆனால், இந்த பைக்குகள் அனைத்தும் சிறிய சந்துகளில்கூட நுழைந்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் தெரியவந்துள்ளது. இத்துடன், கொரோனாவிற்கு எதிராக போராடும் வகையில் அதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் மிகக் குறைவாகவே தெரியவந்துள்ளது. ஆகையால், எதையும் உறுதிப்பட தெரிவிக்க இயலவில்லை. இருப்பினும், அவை முன்னதாக தீயணைப்பு துறையிடம் வழங்கப்பட்ட பைக்குகளின் அம்சத்தை லேசாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..