Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஏத்தர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்து ஏமாற்றமான தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் மிகவும் பிரபலமான பிராண்டாக மாறி இருக்கிறது.
கவர்ச்சியான டிசைன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்கள் கவர்ந்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் மாடலையும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பிரச்னையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் கூறி இருக்கிறது. அதேநேரத்தில், தற்போதுள்ள மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மணிகன்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா,"தற்சமயம் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.
தற்போது விற்பனையில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களுக்கான சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது தொழில்நுட்ப மைய பொறியாளர்கள், சப்ளையர்கள் என அனைத்து பிரிவுகளையும் தற்போதைய மாடலை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கான திட்டத்தை கொடுத்துள்ளோம்.
கொரோனா பிரச்னையால்தான் எலெக்ட்ரிக் பைக் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். மேலும், எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு எதிர்காலத்தில் வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தற்போதைக்கு குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்று கருதலாம்," என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏத்தர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் சந்தைக்கு வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏத்தர் ஸ்கூட்டர்கள் போன்றே, அதன் எலெக்ட்ரிக் பைக்கும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
Photo Credit:Sreejith Krishnan Kunjappan
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!