Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை செய்த யமஹா ஊழியர்கள்... என்னனு தெரியுமா?
யமஹா நிறுவனத்தின் ஊழியர்கள் நல்ல காரியம் ஒன்றை செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகையே தற்போது நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையெல்லாம் கொரோனா வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது வேகம் எடுத்துள்ளது. இதை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட உதவும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு தற்போது நிதியுதவியும் குவிந்து வருகிறது.
குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில், கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு, யமஹா நிறுவனத்தின் ஊழியர்கள் தற்போது 61.5 லட்ச ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளனர். இது யமஹா நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை விட்டு கொடுத்து, 61.5 லட்ச ரூபாய் நிதியை திரட்டியுள்ளனர். இந்த தகவலை யமஹா நிறுவனம் நேற்று (மே 9) வெளியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த தொகையை மத்திய, மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கவுள்ளதாக, யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி மற்றும் உத்தர பிரதேச முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது. எஞ்சிய 11.5 லட்ச ரூபாய் பிஎம் கேர்ஸ் ஃபண்டிற்கு (PM Cares Fund) நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஊழியர்களின் இந்த செயல்பாடு பாராட்டுக்குரியது.
காஞ்சிபுரம் (தமிழ் நாடு), சூரஜ்பூர் (உத்தர பிரதேசம்) மற்றும் ஃபரிதாபாத் (ஹரியானா) ஆகிய 3 ஆலைகளில் பணியாற்றும் ஒயிட்-காலர் மற்றும் ப்ளூ-காலர் பணியாளர்கள் மற்றும் அங்கு பயிற்சி பெற்று வரும் சிலர் ஆகியோர் இந்த நன்கொடையில் பங்களிப்பு செய்துள்ளனர். அத்துடன் சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஏரியா அலுவலகங்களும் பங்களிப்பை செய்துள்ளன.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களின் இத்தகைய பங்களிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக வென்டிலேட்டர்களின் உற்பத்தியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பாக பங்களித்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், வென்டிலேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தற்போது அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதால், அவற்றை உற்பத்தி செய்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டு கொண்டது. இதன் பேரில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளன.
அதே சமயம் எம்ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் பயணம் செய்வதற்காக கார்களை வழங்கவும் முன்வந்துள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனம் 100 ஹெக்டர் எஸ்யூவி கார்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா தவிர, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான போரில், சிறப்பான பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளன. இதன்படி டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!