Just In
- 41 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 4 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
விறுவிறுப்பானது டக்கார் ராலி... விபத்துக்களால் களேபரமானது பந்தய களம்!
டக்கார் ராலி பந்தயத்தின் மூன்றாவது ஸ்டேஜ் வீரர்களுக்கு மிக சவாலானதாக அமைந்ததுடன், ஏராளமான விபத்துக்களும் ஏற்பட்டன. இதனால், பந்தய களம் களேபரமாக இருந்தது.
சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாவது ஸ்டேஜ் நடந்த பந்தய களம் பாலைவன பகுதிகள் அதிகம் இருந்ததால், வீரர்களுக்கு வழியை கண்டு பிடித்து செல்வதில் பெரும் சிரமம் இருந்தது.
அத்துடன், முன்னால் சென்ற வாகனங்களிலிருந்து கிளம்பிய புழுதியும் பெரும் சவாலையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது. புழுதி காரணமாக, பல விபத்துக்களும் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது.
டக்கார் ராலியில் முதல்முறையாக பங்கேற்ற இளம் இந்திய வீரர் ஹரித் பைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிர்சனை காரணமாக, போட்டியிலிருந்து விலகினார்.
இருப்பினும், ஒயில்டு கார்டு முறையில் அவர் பங்கேற முடியும். ஒவ்வொரு ஸ்டேஜிலும் அவரது தர வரிசை எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், ஒட்டுமொத்த தர வரிசையில் இடம்பிடிக்க முடியாது.
மூன்றாவது ஸ்டேஜில் பல வீரர்கள் விபத்தில் சிக்கினர். மான்ஸ்ட்டர் எனெர்ஜி யமஹா ராலி அணியை சேர்ந்த வான் பெவரென் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
ஹீரோ மோட்டோகார்ப் அணியை சேர்ந்த இந்திய அணி வீரர் சி.எஸ்.சந்தோஷ் மூன்றாவது ஸ்டேஜில் 51வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்த தர வரிசையில் 4 இடங்கள் முன்னேறி 44வது இடத்தை பிடித்தார்.
மூன்றாவது ஸ்டேஜ் நிறைவு குறித்து சி.எஸ்.சந்தோஷ் குறிப்பிடுகையில்," இது மிக நீண்ட பந்தயமாக அமைந்தது. மணல் பள்ளத்தாக்குகளை கடப்பதிலும், புழுதியும் கடும் சவாலாக இருந்தது. தடத்தை சரியாக பிடித்து செல்வதும் மிகுந்த சிரமத்தை அளித்தது. மூன்றாவது ஸ்டேஜில் அதிக தவறுகளை செய்தாலும், நிறைவு செய்தது மகிழ்ச்சி தருகிறது," என்று தெரிவித்தார்.
முதல் இரண்டு ஸ்டேஜ்களில் சிறப்பான இடத்தை பிடித்த ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் பாவ்லோ கான்க்ளேவ்ஸின் ஹீரோ 450ஆர்ஆர் பைக்கின் எஞ்சின் பிரச்னை காரணமாக நடுவழியில் பாதிப்பை சந்தித்தார். புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு மூன்றாவது ஸ்டேஜை நிறைவு செய்தார்.
மற்றொரு வீரர் செபாஸ்டியன் பஹ்லர் மூன்றாவது ஸ்டேஜில் 21வது இடத்தை பிடித்தார். மொத்தத்தில் மூன்று வீரர்களும் சிறப்பான இடத்தை பிடித்து நிலைத்து வருகின்றனர்.
ஷெர்கோ டிவிஎஸ் அணி வீரர் லாரன்ஸோ சான்டோலின் மற்றும் ஜானி அபுபெர்ட் ஆகியோர் முறையே 10வது மற்றும் 12வது இடங்களை பிடித்து வலுவான நிலையில் உள்லனர். ஷெர்கோ டிவிஎஸ் அணி ஒட்டுமொத்த தர வரிசையில் 20வது இடத்தில் உள்ளது.
இரண்டு முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் வென்ற வீரர் ஃபெர்னான்டோ அலான்ஸோ 5வது இடத்தை பிடித்தார். இரண்டாவது ஸ்டேஜில் விபத்து காரணமாக பாதிப்பை சந்தித்த அவர் மூன்றாவது ஸ்டேஜ் முடிவில் 32வது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது ஸ்டேஜ் மிக சவாலான நிலபரப்புகளை கடந்து சென்றதால், பலர் விலகினர். ஒரு இந்திய வீரர் விலகினாலும், இந்தியாவின் ஹீரோ மற்றும் டிவிஎஸ் அணிகள் தரவரிசை பட்டியலில் முன்னேறுவதற்கு துடிப்புடன் செயலாற்றி வருகின்றன.
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!