Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு!
தொடர்ப்பு எதிர்ப்பு காரணமாக சீன நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு ஐரோப்பிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றில் சீன தயாரிப்புகள் மிக தாரளமாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றன. மக்கள் மத்தியில் அவற்றிற்கு கிடைத்து வரும் நல்ல வரவேற்பே இதற்கு காரணம். அவை மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்ற காரணத்தினாலயே மக்களிடம் பேராதரவை பெற்று வருகின்றன.
ஆனால், சீன தயாரிப்புகள் பெரும்பாலானவை குறைந்த ஆயுட் காலத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இருப்பினும், மலிவு விலையில் கிடைப்பதால் மக்கள் அப்பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அதேசமயம், சீன தயாரிப்புகள் குறைந்த ஆயுட்காலத்தை மட்டுமே கொண்ட பொருட்களாக இல்லை. அவற்றில் பல பிரபலமான நிறுவனங்களின் டூப்ளிகேட் வெர்ஷன்களாகவும் காட்சியளிக்கின்றன.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அந்தவகையில், சீன நிறுவனங்கள் டூப்ளிகேட் செய்யாத தயாரிப்புகளே இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு, அனைத்துத் துறை பயன்பாட்டு பொருட்களையும் ஒரு சில சீன நிறுவனங்கள் போலியாக தயாரித்து வருகின்றன.
அதிலும், வாகனங்களை டூப்ளிகேட் செய்வதில் சீன நிறுவனங்கள் கை தேர்ந்தவையாக இருக்கின்றன. அப்படியாக டூப்ளிகேட் செய்யப்பட்ட ஸ்கூட்டருக்குதான் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சொத்து சார் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பியாஜியோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான வெஸ்பாவைதான் இம்முறை சீன நிறுவனம் டூப்ளிகேட் செய்துள்ளது.
வெஸ்பா பிராண்டின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக பிரைமவேரா (Primavera) இருக்கின்றது. இதன் ட்வின் மடாலாக தோன்றும் வகையிலேயே சீன ஸ்கூட்டர் காப்பி-பேஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றது.
இதனால், அதிர்ச்சியுற்ற பியாஜியோ நிறுவனம் (வெஸ்பாவின் தாய் நிறுவனம்) சீன நிறுவனத்தின் குறிப்பிட்ட காப்பி தயாரிப்பிற்கு தடை கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவுசார் சொத்து அலுவலகத்தில் புகாரளித்தது. இந்த புகாரையடுத்து விசாரைணை மேற்கொண்ட அந்த அமைப்பு சீன நிறுவனம் டூப்ளிகேட் செய்திருப்பதை உறுதி செய்தது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் எந்தவொரு நாட்டிலும் அந்த ஸ்கூட்டரை விற்கக்கூடாது என தடையும் விதித்தது.
இந்த தடையால் வெஸ்பாவின் இரட்டையராக உருவாகியிருக்கும் சீன நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பனைச் செய்ய முடியாமல் தேங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
சீன நிறுவனத்தின் இந்த டூப்ளிகேட் ஸ்கூட்டர்கள் கடந்த 2019ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரத்தில் நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது, அந்த ஸ்கூட்டர்களைப் பார்த்த பெரும்பாலானோர், அதனை வெஸ்பா பிரைம்வேராவின் அடுத்த தலைமுறை ஸ்கூட்டராகவே கருதினர். ஏனென்றால், யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் அந்த ஸ்கூட்டர் மிகவும் நேர்த்தியாக டூப்ளிகேட் செய்யப்பட்டிருந்தது.
எனவே, இந்த ஸ்கூட்டரின் உருவத் தோற்றத்திற்கு ஏற்கனவே நாங்கள் காப்பி ரைட்ஸ் அனுமதி வாங்கிவிட்டோம் என வெஸ்பா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை மேற்கொண்டு வந்த ஐரோப்பிய நீதிமன்றம் தற்போது பியாஜியோ நிறுவனத்திற்கே சாதகமாகவே தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
வெஸ்பா நிறுவனத்தின் தயாரிப்புகள் இதுபோன்று டூப்ளிகேட் செய்யப்படுவது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுமாதிரியான சோதனைகள் பலவற்றை அது உலக சந்தையில் சந்தித்துள்ளது. மேலும், அதில் வெற்றியையும் அது கண்டுள்ளது.
இதுபோன்ற டூப்ளிகேட் வெர்ஷன்கள் உண்மையான மாடலுக்கு டஃப் கொடுப்பதுடன், அதன் விற்பனைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவேதான் முன்னதாக உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் செலவைப் பொருட்படுத்தாமல் போட்டி நிறுவனங்களின் டூப்ளிகேட் மாடல்களை சட்ட ரீதியாக அணுகி வெளியேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விற்பனை இலக்கை எட்ட முடியாமல் வெஸ்பா நிறுவனம் தவித்து வருகின்றது. இந்நிலையில், இதுபோன்ற டூப்ளிகேட் வெர்ஷன்களாலும் அது இன்னல்களைச் சந்திக்க ஆளாகியிருக்கின்றது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!