Just In
- 20 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்?
இந்தியாவில் செயல்பட்டு வரும் தனது பைக் உற்பத்தி ஆலையை மூடுவதற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பிரம்மாண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் தோற்றமும், அலாதியான சைலென்சர் சப்தமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது. மேலும், உலக அளவில் பணக்காரர்களின் அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பிரிமீயம் க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் ஹார்லி டேவிட்சன் முதன்மையான நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு, உலக அளவில் தனது வர்த்தகத்தை சீரமைக்கும் பணிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளது. இதன்படி, பல முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில், இந்தியாவில் பிரிமீயம் வகை பைக் மாடல்களுக்கான வரவேற்பும்,விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று ஹார்லி டேவிட்சன் கருதுகிறது. மேலும், கொரோனாவால் கடந்த ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது.
இவற்றை மனதில் வைத்து, இந்தியாவில் வர்த்தக திட்டங்களில் பல அதிரடி முடிவுகளை ஹார்லி டேவிட்சன் எடுத்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலம் பவல் பகுதியில் செயல்பட்டு வரும் தனது பைக் உற்பத்தி ஆலையை மூடுவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அடுத்த மாத இறுதியுடன் பவல் பைக் உற்பத்தி ஆலையில் உற்பத்திப் பணிகளை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. மேலும், ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஜீவ் ராஜசேகரன் சிங்கப்பூர் பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பைக் மாடல்களையும் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் 750 பைக் மாடல் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இந்த தகவல் உறுதியானால், ஸ்ட்ரீட் 750 பைக் மாடலின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பது தெரியவில்லை.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடலாக ஸ்ட்ரீட் 750 பைக் விற்பனையில் உள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் மாடலாகவும் ஸ்ட்ரீட் 750 உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் குறித்து இதுவரை ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் இந்த வர்த்தக சீர்த்திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.