Just In
- 57 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
சூப்பர்... மருத்துவமனைக்கு டூவீலர் ஆம்புலன்ஸ்களை வழங்கிய ஹீரோ... இதோட ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா?
ஹீரோ நிறுவனம் மருத்துவமனை ஒன்றுக்கு டூவீலர் ஆம்புலன்ஸ்களை தானமாக வழங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR - Corporate Social Responsibility) முயற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டிற்கு ஏராளமான நல்ல காரியங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இதில், உலகின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமாக திகழும் ஹீரோ மோட்டோகார்ப் முக்கியமானது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இரண்டு டூவீலர் ஆம்புலன்ஸ்களை (FRV - First Responder Vehicles), ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தற்போது வழங்கியுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் தவிக்கும் நோயாளிகளுக்கு இந்த வாகனங்கள் வரப்பிரசாதமாக இருக்கும்.
அங்குள்ள நோயாளிகளை அழைத்து வந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது, இப்படிப்பட்ட டூவீலர் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வழங்குவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் இருக்கும் நீம்ரானா மற்றும் முன்டேவர் சமுதாய சுகாதார மையங்களுக்கு, கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதேபோன்ற இரண்டு டூவீலர் ஆம்புலன்ஸ்களை வழங்கியிருந்தது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் பாராட்டுதலுக்கு உரியவை.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Hero Xtreme 200R) பைக்கில் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டு, இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் பக்கவாட்டில் நோயாளிகள் படுத்துக்கொள்ள ஏதுவாக ஸ்ட்ரெச்சர் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர முதலுதவி பெட்டியும் இந்த பைக்குகளில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆக்ஸிஜன் சிலிண்டர், தீயணைப்பான், அவசர சமயங்களில் பொதுமக்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதற்கான அமைப்பு, சைரன் ஆகியவையும் இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்களில் இடம்பெற்றுள்ளன. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில், 199.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1 எச்பி பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
எளிதில் வளையக்கூடியதாகவும், அடக்கமான அளவில் இருப்பதாலும், இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் மிகவும் சௌகரியமானதாக இருக்கும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதேபோன்ற டூவீலர் ஆம்புலன்ஸ்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவனைகளுக்கு வழங்கப்படும்.
அத்துடன் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, 14 லட்சம் உணவு, 37 ஆயிரம் லிட்டர் சானிடைசர், 30 லட்சம் முக கவசங்கள் மற்றும் 15 ஆயிரம் முழு கவச உடைகள் (Personal Protective Equipment Kit - PPE kit) ஆகியவற்றை, அரசு மருத்துவமனைகள் மற்றும் காவல் துறையில் உள்ள முன்கள வீரர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் வழங்கியுள்ளது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!