Just In
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 11 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜனவரி 30ம் தேதி நாடு முழுக்க உண்ணாவிரதம், பொதுக்கூட்டங்கள்.. விவசாய சங்கங்கள் அறிவிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!
நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக பார்க்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப், அதன் ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. இந்த நிறுவனமே, அதன் ஸ்கூட்டரை சர்வதேச சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கு இணையானதாக மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக இணைப்பு (Connected Feature) வசதியையே ஹீரோ மோட்டோகார்ப் அதன் ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை அண்மையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, யமஹா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் அதன் பிரபல மாடல்களில் இணைப்பு வசதியை அறிமுகப்படுத்தின.

இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் சந்தையின் போட்டித் தன்மைக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வகையில் புதிய இணைப்பு வசதியை அதன் ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் அதன் போட்டியாளர்களுக்கு மேலும் டஃப் கொடுக்கும் வகையில் மாறியிருக்கின்றது. இதற்காக தனித்துவமான செல்போன் செயலி ஒன்றையும் அது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஹீரோ ஸ்கூட்டர்களை செல்போனுடன் இணைக்க முடியும்.

அவ்வாறு இணைத்த பின்னர் ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை செல்போன் செயலி மூலமாகவே பெற முடியும். குறிப்பாக, வாகனம் இருக்கும் இடம், செல்லும் பாதை, முன்னதாக பயணித்த பகுதி என பல்வேறு தகவல்களை விரல் நுணியில் பெற முடியும். இத்துடன், திருட்டு சம்பவத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், திருட்டு அச்சம் துளியளவும் இருக்க தேவையில்லை.

இதில், வழங்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதியே இந்த பயத்தைப் போக்கும் வகையில் உள்ளது. இதை வைத்து கூகுள் மேப் உதவியுடன் வாகனம் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இத்துடன், செல்போனில் வரக்கூடிய அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் ஸ்கூட்டரின் திரையிலேயேக் காணக்கூடிய வசதியும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய தொழில்நுட்ப வசதியின் காரணமாக புதிய வாகனங்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6,499 வரை உயர வாய்ப்பு உள்ளது. தற்போது டெஸ்டினி 125 மற்றும் பிளஷர் பிளஸ் ஆகிய ஸ்கூட்டர்களின் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், எக்ஸ்பல்ஸ் 200 மாடல் பைக்கிலும் இந்த வசதி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.