Just In
- 21 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 4 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 6 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது!
நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக பார்க்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப், அதன் ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. இந்த நிறுவனமே, அதன் ஸ்கூட்டரை சர்வதேச சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கு இணையானதாக மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக இணைப்பு (Connected Feature) வசதியையே ஹீரோ மோட்டோகார்ப் அதன் ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை அண்மையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, யமஹா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் அதன் பிரபல மாடல்களில் இணைப்பு வசதியை அறிமுகப்படுத்தின.
இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் சந்தையின் போட்டித் தன்மைக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வகையில் புதிய இணைப்பு வசதியை அதன் ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் அதன் போட்டியாளர்களுக்கு மேலும் டஃப் கொடுக்கும் வகையில் மாறியிருக்கின்றது. இதற்காக தனித்துவமான செல்போன் செயலி ஒன்றையும் அது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஹீரோ ஸ்கூட்டர்களை செல்போனுடன் இணைக்க முடியும்.
அவ்வாறு இணைத்த பின்னர் ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை செல்போன் செயலி மூலமாகவே பெற முடியும். குறிப்பாக, வாகனம் இருக்கும் இடம், செல்லும் பாதை, முன்னதாக பயணித்த பகுதி என பல்வேறு தகவல்களை விரல் நுணியில் பெற முடியும். இத்துடன், திருட்டு சம்பவத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், திருட்டு அச்சம் துளியளவும் இருக்க தேவையில்லை.
இதில், வழங்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதியே இந்த பயத்தைப் போக்கும் வகையில் உள்ளது. இதை வைத்து கூகுள் மேப் உதவியுடன் வாகனம் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இத்துடன், செல்போனில் வரக்கூடிய அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் ஸ்கூட்டரின் திரையிலேயேக் காணக்கூடிய வசதியும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய தொழில்நுட்ப வசதியின் காரணமாக புதிய வாகனங்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6,499 வரை உயர வாய்ப்பு உள்ளது. தற்போது டெஸ்டினி 125 மற்றும் பிளஷர் பிளஸ் ஆகிய ஸ்கூட்டர்களின் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், எக்ஸ்பல்ஸ் 200 மாடல் பைக்கிலும் இந்த வசதி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!