Just In
- 11 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்
ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான எளிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சொல்ல முடியாத துயரங்களை கொடுத்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைய அடியோடு புரட்டி போட்டிருப்பதுடன், அனைத்து தொழில்களையும் முடக்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மன உறுதியுடன் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ள வாகனத் துறையும் பல்வேறு திட்டங்களும் இந்த கடினமான சூழலிலிருந்து வெளியே வர முயற்சித்து வருகின்றன.
இதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறப்பு திட்டங்களை வாகன நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா டூ வீலர் நிறுவனம் தனது வாகனங்களுக்கான எளிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, வாகனத்தின் விலையில் 95 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன், முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணையில் 50 சதவீதம் குறைவான தொகையை செலுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் நிலைமை ஓரளவு சீரடைந்தவுடன் வாடிக்கையாளர்கள் முழுமையாக மாதத் தவணையை செலுத்தும் விதத்தில் இந்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், ரூ.40,000 கடன் வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.828 மாதத் தவணையும், அதன்பிறகு ரூ.1656 மாதத் தவணையையும் செலுத்தலாம். ரூ.50,000 கடன் வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.1,035 மாதத் தவணையும், அதன் பின்னர் மாதம் ரூ.2,070 வரை செலுத்தலாம். ரூ.70,000 கடன் வாங்கினால் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.1,449 மாதத் தவணையும், அதன் பின்னர் ரூ.2,898 என்ற மாதத் தவணையுடன் தொடரலாம்.
இந்த சிறப்பு கடன் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, குறிப்பிட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்பட உள்ளதாக ஹோண்டா டூ வீலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஹோண்டா இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருப்போர், தற்போதைய பொருளாதார சூழலை சமாளித்துக் கொண்டு உடனடியாக தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கும்.
லாக் டவுன் நீடித்தாலும் கொரோனா தொற்று குறைவான பகுதிகளில் ஹோண்டா ஷோரூம்கள் டீலர்கள் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும்பான்மையான ஹோண்டா ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, ஹோண்டா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களை தொடர்பு கொண்டு புதிய வாகனத்தை வாங்கலாம்.