Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா.. இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் புதிய சாதனைப் படைத்து, போட்டி நிறுவனங்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கே அதிகம் வரவேற்பு நிலவி வருகின்றது. ஹீரோ, ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களுக்கு இங்கு ஏகபோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், அண்மைக் காலங்களாக இந்நிறுவனங்களின் வாகன விற்பனை மற்றும் உற்பத்திக்கு கொரோனா வைரஸ் முட்டுக் கட்டை போட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் இயக்கமற்ற நிலையில் உள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால் இந்நிலையே நாடு முழுவதும் காணப்படுகின்றது. இதனால், மக்கள் அவரவர்களின் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
இதன் விளைவாக வழக்கமான இயக்கங்கள் அனைத்தும் முழுமையாக தடையாகியுள்ளது. இதில், வாகன உற்பத்தியும் அடங்கும்.
இதுமட்டுமின்றி, மக்கள் நடமாட்டத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரே ஒரு யூனிட் வாகனத்தைகூட விற்க முடியாமல் டீலர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கு சில முன்னணி நிறுவனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வதை ஊக்குவித்து வருகின்றன.
ஆனால், இம்மாதிரியான முயற்சிகளுக்கு முன்னரே ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய சாதனையைச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா இருசக்கர வாகனங்களின் விற்பனை தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், 2020 மார்ச் மாத விற்பனையில் 2,61,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து, 5 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
இதுவே, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையைப் பார்த்தோமேயானால் 2,49,136 யூனிட்டுகளை மட்டுமே அந்நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது.
இந்த தகவல்களை வைத்து பார்க்கையில் கொரோனை வைரசின் அறிகுறி உலகம் முழுவதும் தெரிய ஆரம்பித்த பின்னரும் மக்கள் பலர் ஒன்று திரண்டு ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று, உள்நாட்டு விற்பனையிலும் ஹோண்டா நிறுவனம் 11 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
அதாவது, கடந்த வருட மார்ச் 2,22,325 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்த ஹோண்டா நடப்பாண்டில் 2,45,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து சாதித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணாக பல நிறுவனங்கள் தங்களின் ஆபரேஷன்கள் அனைத்தையும் நிறுத்தின. இதேபோன்று ஹோண்டா நிறுவனம் வைரஸ் காரணமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்படியிருந்தும், மக்கள் தங்களின் புதிய வாகனத்திற்கான தொகையைச் செலுத்தியுள்ளனர்.
இதனாலயே ஹோண்டாவால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சாதிக்க முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இலவச சேவைகள் சிலவற்றை அறிவித்துள்ளது. இத்துடன், வாரண்டி மற்றும் சர்வீஸ் காலவதியை நாட்களைக் கூடுதலாக அதிகரித்து வழங்கியுள்ளது. இதேபோன்ற நடவடிக்கையைதான் மேலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
இதேபோல், புதிய மாசு உமிழ் பிஎஸ்-6 இன் காரணமாக பல நிறுவனங்கள் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கின்ற வேலையில், ஹோண்டா நிறுவனம் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாகவே தயாராகிவிட்டது. இந்நிறுவனம், சரியாக புதிய விதி அமலுக்கு வரவிருப்பதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பிஎஸ் 6 தர இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டது. அதன்படி, முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!