Just In
- 43 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா.. இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் புதிய சாதனைப் படைத்து, போட்டி நிறுவனங்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கே அதிகம் வரவேற்பு நிலவி வருகின்றது. ஹீரோ, ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களுக்கு இங்கு ஏகபோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், அண்மைக் காலங்களாக இந்நிறுவனங்களின் வாகன விற்பனை மற்றும் உற்பத்திக்கு கொரோனா வைரஸ் முட்டுக் கட்டை போட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் இயக்கமற்ற நிலையில் உள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால் இந்நிலையே நாடு முழுவதும் காணப்படுகின்றது. இதனால், மக்கள் அவரவர்களின் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
இதன் விளைவாக வழக்கமான இயக்கங்கள் அனைத்தும் முழுமையாக தடையாகியுள்ளது. இதில், வாகன உற்பத்தியும் அடங்கும்.
இதுமட்டுமின்றி, மக்கள் நடமாட்டத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரே ஒரு யூனிட் வாகனத்தைகூட விற்க முடியாமல் டீலர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கு சில முன்னணி நிறுவனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வதை ஊக்குவித்து வருகின்றன.
ஆனால், இம்மாதிரியான முயற்சிகளுக்கு முன்னரே ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய சாதனையைச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா இருசக்கர வாகனங்களின் விற்பனை தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், 2020 மார்ச் மாத விற்பனையில் 2,61,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து, 5 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
இதுவே, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையைப் பார்த்தோமேயானால் 2,49,136 யூனிட்டுகளை மட்டுமே அந்நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது.
இந்த தகவல்களை வைத்து பார்க்கையில் கொரோனை வைரசின் அறிகுறி உலகம் முழுவதும் தெரிய ஆரம்பித்த பின்னரும் மக்கள் பலர் ஒன்று திரண்டு ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று, உள்நாட்டு விற்பனையிலும் ஹோண்டா நிறுவனம் 11 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
அதாவது, கடந்த வருட மார்ச் 2,22,325 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்த ஹோண்டா நடப்பாண்டில் 2,45,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து சாதித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணாக பல நிறுவனங்கள் தங்களின் ஆபரேஷன்கள் அனைத்தையும் நிறுத்தின. இதேபோன்று ஹோண்டா நிறுவனம் வைரஸ் காரணமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்படியிருந்தும், மக்கள் தங்களின் புதிய வாகனத்திற்கான தொகையைச் செலுத்தியுள்ளனர்.
இதனாலயே ஹோண்டாவால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சாதிக்க முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இலவச சேவைகள் சிலவற்றை அறிவித்துள்ளது. இத்துடன், வாரண்டி மற்றும் சர்வீஸ் காலவதியை நாட்களைக் கூடுதலாக அதிகரித்து வழங்கியுள்ளது. இதேபோன்ற நடவடிக்கையைதான் மேலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
இதேபோல், புதிய மாசு உமிழ் பிஎஸ்-6 இன் காரணமாக பல நிறுவனங்கள் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கின்ற வேலையில், ஹோண்டா நிறுவனம் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாகவே தயாராகிவிட்டது. இந்நிறுவனம், சரியாக புதிய விதி அமலுக்கு வரவிருப்பதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பிஎஸ் 6 தர இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டது. அதன்படி, முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...