Just In
- 30 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 2 hrs ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா.. இக்கட்டான சூழ்நிலையிலும் புதிய சாதனை.. போட்டி நிறுவனங்கள் வியப்பு
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் புதிய சாதனைப் படைத்து, போட்டி நிறுவனங்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கே அதிகம் வரவேற்பு நிலவி வருகின்றது. ஹீரோ, ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களுக்கு இங்கு ஏகபோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், அண்மைக் காலங்களாக இந்நிறுவனங்களின் வாகன விற்பனை மற்றும் உற்பத்திக்கு கொரோனா வைரஸ் முட்டுக் கட்டை போட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் இயக்கமற்ற நிலையில் உள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால் இந்நிலையே நாடு முழுவதும் காணப்படுகின்றது. இதனால், மக்கள் அவரவர்களின் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
இதன் விளைவாக வழக்கமான இயக்கங்கள் அனைத்தும் முழுமையாக தடையாகியுள்ளது. இதில், வாகன உற்பத்தியும் அடங்கும்.
இதுமட்டுமின்றி, மக்கள் நடமாட்டத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரே ஒரு யூனிட் வாகனத்தைகூட விற்க முடியாமல் டீலர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கு சில முன்னணி நிறுவனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வதை ஊக்குவித்து வருகின்றன.
ஆனால், இம்மாதிரியான முயற்சிகளுக்கு முன்னரே ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய சாதனையைச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா இருசக்கர வாகனங்களின் விற்பனை தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், 2020 மார்ச் மாத விற்பனையில் 2,61,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து, 5 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
இதுவே, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையைப் பார்த்தோமேயானால் 2,49,136 யூனிட்டுகளை மட்டுமே அந்நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது.
இந்த தகவல்களை வைத்து பார்க்கையில் கொரோனை வைரசின் அறிகுறி உலகம் முழுவதும் தெரிய ஆரம்பித்த பின்னரும் மக்கள் பலர் ஒன்று திரண்டு ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று, உள்நாட்டு விற்பனையிலும் ஹோண்டா நிறுவனம் 11 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
அதாவது, கடந்த வருட மார்ச் 2,22,325 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்த ஹோண்டா நடப்பாண்டில் 2,45,699 யூனிட்டுகளை விற்பனைச் செய்து சாதித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணாக பல நிறுவனங்கள் தங்களின் ஆபரேஷன்கள் அனைத்தையும் நிறுத்தின. இதேபோன்று ஹோண்டா நிறுவனம் வைரஸ் காரணமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்படியிருந்தும், மக்கள் தங்களின் புதிய வாகனத்திற்கான தொகையைச் செலுத்தியுள்ளனர்.
இதனாலயே ஹோண்டாவால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சாதிக்க முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இலவச சேவைகள் சிலவற்றை அறிவித்துள்ளது. இத்துடன், வாரண்டி மற்றும் சர்வீஸ் காலவதியை நாட்களைக் கூடுதலாக அதிகரித்து வழங்கியுள்ளது. இதேபோன்ற நடவடிக்கையைதான் மேலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
இதேபோல், புதிய மாசு உமிழ் பிஎஸ்-6 இன் காரணமாக பல நிறுவனங்கள் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கின்ற வேலையில், ஹோண்டா நிறுவனம் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாகவே தயாராகிவிட்டது. இந்நிறுவனம், சரியாக புதிய விதி அமலுக்கு வரவிருப்பதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பிஎஸ் 6 தர இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டது. அதன்படி, முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.