Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் டெலிவிரி பணிகள் தள்ளிப்போகிறது!
உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனாவால், பெரும் ஆவலை ஏற்படுத்திய ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் டெலிவிரி பணிகளில் தள்ளி வைக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, வாகன உற்பத்திப் பணிகள் அடியோடு முடங்கியுள்ளன. அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்து வாகன நிறுவனங்களும் ஆலைகளை மூடி வைத்துள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனமும் பீதம்பூரில் உள்ள ஆலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இங்குதான் ஜாவா பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கனவே, ஜாவா பைக்குகளின் டெலிவிரி பணிகள் மிகுந்த தாமதமாக நடந்து வருவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார்களும், குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் ஜாவா பைக்குகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால், டெலிவிரி பணிகள் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்நிறுவனத்தின் ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளின் டெலிவிரி குறித்து கடும் அதிருப்தி இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 2 முதல் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் டெலிவிரி பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வால் இல்லாத வடிவமைப்புடன் கூடிய இந்த பாபர் வகை ஜாவா பெராக் பைக்கின் மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆவல் கொண்டு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதுடன், ஷோரூம்களும் மூடப்பட்டு இருப்பதால், இந்த பைக்கின் டெலிவிரி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்6 விதிகள் அமலுக்கு வரும்போது ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரியை துவங்குவதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த பைக்கை டெலிவிரி பெற ஆவலுடன் காத்திருப்பவர்கள் மேலும் சில காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்6 விதிகள் அமலுக்கு வரும்போது ஜாவா பெராக் பைக்கின் டெலிவிரியை துவங்குவதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த பைக்கை டெலிவிரி பெற ஆவலுடன் காத்திருப்பவர்கள் மேலும் சில காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாவா பெராக் பைக்கில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 334சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பைக்கிற்கு நேரடியாக போட்டி இல்லை. இது தனித்துவமான டிசைனில் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் பாபர் வகை பைக் மாடலாக இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?