'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

போதையில் செய்வதறியாமல் இளைஞர் ஒருவர் செய்த காரியத்தால் ஊர் மக்கள் பதற்றத்தில் உறைந்தனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏறத்தாழ 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நீடித்து வருகின்றது. தற்போது மூன்றாவது கட்டமாக அமலில் இருக்கும் தடையுத்தரவு, லேசான தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு சில மாநிலங்கள் லேசான இயக்கத்தைக் காண ஆரம்பித்திருக்கின்றன.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

ஆனால், இது முழுமையான இயக்கமல்ல. தற்போதும் மக்கள் வழக்கம்போல் நடமாட தடை விதிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. அதேசமயம், இந்த லேசான தளர்வின் காரணமாக ஒரு சில துறைகள் மட்டும் அதிக கட்டுப்பாடுடன் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக, அரசுக்கு அதிக லாபத்தை ஈட்டி தரும் மதுபானக் கடைகள் ஒரு சில மாநிலங்களில் விற்பனையைத் தொடங்கியிருக்கின்றது.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

கடந்த 40 நாட்களுக்கும் அதிகமாக மதுவின் வாசனைக்கூட நுகர முடியாமல் தவித்து வந்த குடிமகன்கள் இதனால் குஷியாகியுள்ளனர். குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் மது விற்பனைத் தொடங்கிய முதல் நாளிலேயே பல கோடி ரூபாய்க்கு மது விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றது.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

அதாவது, உச்சபட்ச ஹீரோக்களின் முதல் நாள் வசூலுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் முதுபான கடைகள் ஏகபோகமாக கல்லாகட்டத் தொடங்கியிருக்கின்றன.

விரைவில் தமிழகத்திலும் மது விற்பனை ஆரம்பிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

அதவாது, நாளை (மே7) முதல் சென்னை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மது விற்பனைக்கு அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடாகவில் மது விற்பனை ஏற்கனவே கோலாகளமாக தொடங்கிவிட்டது. இதனால் மது பிரியர்கள் வரிசைக் கட்டி பல ஆயிரங்களுக்கு மதுவினை வாங்கி குவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

அவ்வாறு, நீண்ட நாட்கள் கழித்திருந்து மதுவினை வாங்கி குடித்த ஒரு இளைஞர், அவர் சென்ற பாதையை தடுத்ததாக கூறி பாம்பு ஒன்று கடித்தே கொன்றுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் கோலார் பாகுதியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

இந்த சம்பவத்தை அரங்கேற்றிய அந்த நபர், அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளியான இவருக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்) மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் வந்த பாதையில் பாம்பு ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகின்றது.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

அப்போது, போதையில் இருந்த அவர், அந்த பாம்பு அவரின் வழியை மறைப்பதாக எண்ணி, அதனை கைகளால் பிடித்தார். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் பாம்பை கோவமாக திட்டி தீர்த்திய அவர் திடீரென அதனை கடிக்க ஆரம்பித்தார்.

"என் பாதையை எவ்வாறு நீ தடுப்பாய்" என்று கூறியவாறே அதனை வெறும் பற்களால் கடித்து துப்ப ஆரம்பித்தார்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

போதை ஆசாமியின் இந்த செயல் அப்பகுதி மக்களை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற வகையில் இருந்துள்ளது. முன்னதாக பாம்பை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்ட குமார், வெகு நேரமாக அதை திட்டியவாறு இருந்தார். இதைத்தொடர்ந்தே, பாம்பினை கடித்து துப்பியுள்ளார்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

மேலும், பாம்பினை கடிக்கும்போது தனது கோபத்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஓட்டி வந்த ஹீரோ ஹோண்டா ஃபேசன் பிளஸ் பைக்கின் ஆக்சலரேட்டரையும் கூடவே முறுக்கி சத்தத்தை எழுப்பியுள்ளார்.

இச்சம்பவம்குறித்து தகவல் அறிந்த போலீஸார், சுமார் 30 நிமிடங்கள் கால தாமதத்திற்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

ஆனால், அதற்குள் பாம்பு இறந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதேசமயம், குமார் கொன்ற பாம்பு விஷமுடையதா அல்லது விஷமற்றதா என்பது தெரியவில்லை. இருப்பினும், இதையறியாமலே மது போதையில் பாம்பினை கையிலெடுத்து குமார் இவ்வாறு செய்துள்ளார்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

மேலும், "தான் இதுவரை மருத்துவமனை செல்லவில்லை. சம்பவ தினத்தன்று காலையிலும் இதேபோன்று ஒரு பாம்பு என் வேலையை தடுத்தது. மீண்டும், மாலையும் நான் வீடு திரும்பும்போதும் வேறொரு பாம்பு என் பாதையில் குறுக்கிட்டது. எனவேதான் நான் பாம்பை கொன்றேன்" என்றார்.

இளைஞரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும், பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. "நீண்ட நாட்களாக மதுக் கடைகள் திறக்காத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் கிராமத்தில் அரங்கேறாமல் இருந்தது. ஆனால், மது விற்பனைத் தொடங்கிய முதல் நாளே இதுபோன்ற அருவறுக்கத்தக்க சம்பவம் நடைபெற்றிருக்கின்றது" என அக்கிராம பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?

முன்பெல்லாம் குடித்துவிட்டு வாகனத்தில் செல்லும்போது, அவர்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்குமே ஆபத்தை விளைவிக்கும் வகையில் போதை ஆசாமிகள் இருந்து வந்தனர். ஆனால், இம்முறை முற்றிலும் வித்தியாசமாக விலங்குகள்மீது ஆதிக்கத்தைக் காட்ட தொடங்கியிருக்கின்றனர்.

எனவே, மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்குபவர்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஆபத்தான சூழலே ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka Drunk Man Bites Snake. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X