Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு விநாடிதான்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மயிரிழையில் தப்பிய இளைஞர்..! வீடியோ..!
ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வைரலாகி வரும் வீடியோ மற்றும் தகவலைத் தொடர்ந்து காணலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான விபத்து சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அதில், பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனங்களை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. எனவேதான், இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமன்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது.
இருப்பினும், பெரும்பாலான இருசக்கர வாகன பயனர்கள் இதைக் கடைப்பிடிப்பதே இல்லை. இதுதவிர, பல்வேறு விதிமீறல் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதுவே, இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் விதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் உச்சபட்ச வேகத்தில் செல்கின்றனர். இதுவும் அவர்கள் மிக எளிதில் விபத்தைச் சந்திக்க காரணமாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கேரள மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
வீடியோவில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நொடிப் பொழுதில் பெரும் விபத்தில் இருந்து தப்பிப்பதுப் போன்ற பரபரப்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவர், தப்பிப்பதற்கு பேருந்தை ஓட்டி வந்த டிரைவரின் அசாத்தியமான திறனே காரணம் ஆகும். ஆம், பேருந்து ஓட்டுநர் சாமார்த்தியமாக செயல்பட்டதினாலயே மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பதற வைக்கும் காட்சிகளே தற்போது வெளியாகியிருக்கின்றன. இது விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளாகும். இந்த வீடியோவே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இருசக்கர வாகன ஓட்டி திடீரென சருக்கி விழுவதை வீடியோ சுட்டிக் காட்டுகின்றது. சாலை மழை நீரால் ஈரமாக இருந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டி தனது வேகத்தைக் குறைக்கும் விதமாக பிரேக்கை பிடித்துள்ளார். ஆனால், அது அவரை எதிர்பாராத விதமாக சாலையில் சருக்கி விழ வைத்துவிட்டது.
அந்த நேரத்தில் பைக்கை பின் தொடர்ந்தவாறு தனியார் பேருந்து ஒன்றும் வந்துக் கொண்டிருந்தது. ஆனால், அதன் டிரைவர் இருசக்கர வாகனம் சரிந்து விழுவதைச் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பிரேக்கைப் பிடித்தார். மேலும், பேருந்தின் திசையையும் மாற்றினார். இதனாலயே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சாலை ஈரமாக இருந்த காரணத்தால் பேருந்துக் கட்டுப்பாடில்லாமல் வழுக்கியவாறு சென்று, பைக்கின்மீது லேசாக மோதுவதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், டிரைவரின் முயற்சி வீண் போகவில்லை. ஆம், இதனால் இருசக்கர வாகன ஓட்டிக்கு சிறு கீறல்கூட ஏற்படவில்லை. இந்த விபத்துச் சம்பவத்தால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் காணப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நொடிகள் முன்னாடிகள் வரை அதே சாலையில் பல வாகனங்கள் கடந்துச் செல்வதை நம்மால் வீடியோவின் வாயிலாக காண முடிகின்றது. அவையனைத்தும் எந்தவொரு சிக்கலையும் சந்திக்காமலே சென்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஓட்டி செய்த செயல் அவருக்கே நொடி பொழுதில் ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். மேலும், யாருக்கும் எந்த அசம்பாவிதமும் அப்போது நேரவில்லை. மேலும், உடனடியாக விரைந்து வந்த பாதசாரிகள் கீழே பைக்குடன் சரிந்து விழுந்த இளைஞரை தூக்கி சாலையோரத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம், ஈரமான சாலையில் அதிவேகமாக செல்லக் கூடாது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஈரமான சாலைகளில் போதுமான பிடிமானம் கிடைப்பதில்லை. இதனால், வாகனத்தின் இழுவை மற்றும் நிலைத் தன்மை முழுமையாக குறைந்துவிடும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துவிடும். இந்த சூழ்நிலையே பெரும் விபத்து ஏற்பட காரணமாக அமைகின்றது. இதனால்தான் மழை பெய்யும்போது மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?