Just In
- 40 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!
இரு விலையுயர்ந்த பைக்குகள் நேருக்கு நேராக மோதும் விபத்துகுறித்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இருசக்கர வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற பைக்குகளாக கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இவை, குறைந்த விலையில் கிடைக்கும் அதி-திறன் வாய்ந்த பைக்குகள் என்பதால் இந்தியாவில் அமோகமான வரேவற்பைப் பெற்று வருகின்றன.
ஆகையால், இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது இந்தியர்களை கவர்கின்ற வகையில் புதிய மாடல்களை கேடிஎம் அறிமுகம் செய்து வருகின்றது.
அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்சர் ரக பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்த பைக்குகள் கேடிஎம் நிறுவனத்தின் பெயரை நிலை நிறுத்துகின்ற வகையில் நல்ல வரவேற்பை தற்போது பெற்று வருகின்றது. குறிப்பாக, வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பை அவை பெற்றிருக்கின்றன. இதனை உறுதி செய்கின்ற வகையில் அதன் டெலிவரி தகவல்கள் இருக்கின்றன.
இந்நிலையில், அண்மையில் கேடிஎம் நிறுவனத்தின் இந்த அட்வென்சர் ரக பைக்கை வாங்கிய இளைஞர்கள் இருவர் ஆஃப்-ரோடு பயன்பாடுகுறித்த ஆய்வை கரடுமுரடான பாதையில் செய்துள்ளனர். அவ்வாறு, சாகசதத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அவர்கள் விபத்தைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
கேடிஎம் நிறுவனம், இந்த அட்வென்சர் 390 பைக்கில் பைக்கில் 373 சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இது, அதிகபட்சமாக 43 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.
இந்த அதீத திறனானது பல முன்னணி நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் உள்ளது. ஆகையால், இதனை கையாளும்போது சற்று கவனத்துடன் இருப்பது அவசியம்.
குறிப்பாக, ஆஃப்-ரோடில் இந்த பைக்கை பயன்படுத்தும் கூடுதல் கவனம் இருப்பது மிக மிக அவசியமானதாக உள்ளது. இதனை விளக்கும் வகையிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
தற்செயலாக நடைபெற்ற விபத்து சம்பவம்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில், புத்தம் புதிய கேடிஎம் 390 பைக்குகளை பரிசோதனை செய்வதற்கு இரு இளைஞர்கள் ஆயத்தமாகின்றனர். அதில், ஒரு இளைஞர் மட்டும் செயல்பாட்டில் முன்னதாகவே இறங்க, மற்றொருவர் இருந்த இடத்திலேயே நிற்கின்றார்.
அப்போது, நின்ற இடத்திலேயே இருந்த கேடிஎம் பைக்கர்மீது முன்னதாக விரைந்து சென்ற இளைஞர் திரும்பி வருகையில் வேகமாக மோதி கீழே விழுந்தார். அவர், அதி வேகமாக வந்தபோது கட்டுப்பாடின்றி மணல் மேடு மீது ஏறியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
இதனாலயே, ஆஃப் ரோடு சாலைகளில் ஸ்டண்ட் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை என கூறப்படுகின்றது. மேலும், முறையான பயிற்சியின்றி இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.
அதேசமயம், இவ்விரு இளைஞர்களும் சாகசத்தில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட சாலையானது, கரடு முரடான பொதுபோக்குவரத்து வழி என்பது மற்ற வாகனங்களின் சென்று வருவதை வைத்து நம்மால் உணர முடிகின்றது. இதுபோன்று, பொதுசாலைகளில் சாகசத்தில் ஈடுபடுவது போக்குவரத்து வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.
இந்த விபத்தில் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். ஆனால், பைக்கில் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிகின்றது. நேருக்கு நேராக மோதியதன் விளைவாக, பைக்கின் ஹெட்லேம்ப் மற்றும் முன்பக்க வீல் ஃபோர்க் சேதமடைந்திருக்கலாம் என தெரிகின்றது. மேலும், பைக் வந்து மோதிய வேகத்தினால் இருவரும் பைக்கை விட்டு தூக்கி வீசப்படுவதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது.
இரு விலையுயர்ந்த பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்துகுறித்த வீடியோவானது மற்றொரு ரைடரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை விபத்தைச் சந்தித்த இளைஞர்களே விழிப்புணர்வு அவசியத்திற்காக இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு