Just In
- 22 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 33 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?
ஒகினவா நிறுவனத்தின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்று இந்திய மார்க்கெட்டை அசத்த வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இந்த வரிசையில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வந்தன. குறிப்பாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், மத்திய அரசு அதீத ஆர்வம் காட்டி வந்தது.
இந்தியாவின் ஒரு சில முக்கியமான பிரச்னைகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வு என்பதே இதற்கு காரணம். இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்களே முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் மின்சார வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட்டு வரும் உலக நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது.
இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வந்தது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபமெடுத்து ஆட்டத்தை கலைத்து விட்டது. கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு முன்பு வரை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரிசையாக அறிமுகமாகி வந்தன.
மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் அப்படியே முடங்கி போயின. வாகன உற்பத்தி, புதிய வாகனங்கள் அறிமுகம் என அனைத்து பணிகளும் தடைபட்டன.
எனினும் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக, வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்ற செய்திகள் வாகன நிறுவனங்களுக்கு புது தெம்பை அளித்துள்ளன.
பேருந்து, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதலாம். இதன் காரணமாக வாகன விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை சந்தைக்கு கொண்டு வர முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இதன்படி ஒகினவா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான இது, ஓகி100 என்ற பெயரில் அழைக்கப்படும். நடப்பு 2020-21ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் புது ஓகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஒகினவா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
முன்னணி எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா திகழ்ந்து வருகிறது. ஒகினவா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஒகி100 எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிலோ மீட்டர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஒகினவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜிதேந்தர் சர்மா அளித்துள்ள பேட்டியில், ''ஓகி100 மாடலுடன் வரும் பண்டிகை காலத்தின்போது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் நாங்கள் நுழைய உள்ளோம். இந்தியா விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கெட் என்பதால், விலையை சவாலாக நிர்ணயிப்பது முக்கியம்'' என்றார்.
ஒகினவா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஓகி100 எலெக்ட்ரிக் பைக்கின் விலை 1 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகி100 எலெக்ட்ரிக் பைக்கானது, ரிவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் புரோட்டோடைப் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!