Just In
- 35 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஜனாதிபதி பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு..! எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!
மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டு ஜனாதிபதி, மஹிந்திராவின் எந்த தயாரிப்பு பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாக பீஜோ நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், நான்கு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
குறிப்பாக முச்சக்கர வாகனத்தை தயாரிப்பதில் இந்நிறுவனம் பெயர்போன ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பீஜோ தயாரிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிரபல மெட்ரோபாலிஸ் முச்சர வாகனத்தை பிரான்ஸ் நாடு, அதன் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
மெட்ரோபாலிஸ் ஓர் மூன்று சக்கரங்களைக் கொண்ட ஸ்கூட்டராகும். இந்த வாகனத்தையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரான்ஸ் அரசு வாங்கி குவித்துள்ளது. மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பீஜோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரான்சில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இம்மாதிரியான மூன்று சக்கர வாகன அமைப்பில் பீஜோ அறிமுகப்படுத்துவது இது இரண்டாவது மாடலாகும். முன்னதாக இ-லூதிக்ஸ் எனும் மாடலை அது களமிறக்கியிருந்தது. இது, ஓர் மின்சார ஸ்கூட்டராகும். இதனையும் பிரான்ஸ் அரசு குடியரசு தலைவரின் பாதுகாப்பு பணியில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றது.
இந்த நிலையிலேயே புதிய தயாரிப்பான மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரையும் பிரான்ஸ் அரசு தனது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பில் சேர்ப்பதற்காக களமிறக்கியிருக்கின்றது. பீஜோ பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கினாலும், அது தற்போது இந்திய தயாரிப்பாக மாறியிருக்கின்றது. உரிமையாளராக மஹிந்திரா குழுமம் மாறியதை அடுத்து இந்த அந்தஸ்தை அது பெற்றிருக்கின்றது. எனவேதான் இந்த நிகழ்வை இந்தியா தற்போது கொண்டாடி வருகின்றது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக, "நாங்கள் நல்ல நிறுவனத்தின் வாயிலாக மிக சுமூகமாக நகர தொடங்கியுள்ளோம். "பீஜோ மோட்டார்சைக்கிள்" ஓர் @MahindraRise நிறுவனத்தின் தயாரிப்பு" என அவர் பெருமிதம் கொண்டார்.
மஹிந்திரா குழுமத்தின் சர்வதேச செயல்பாட்டு நிர்வாகியாக பிரகாஷ் வகங்கர் செயல்பட்டு வருகின்றார். இவரும், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவின் கூற்றையே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பீஜோ மெட்ரோபாலிஸ் 2020 குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணிக்காக எலிசி அரண்மனை முன்பு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் முச்சக்கர வாகனத்தை பாதுகாப்பு பணிக்காக களமிறக்கியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதன் முச்சக்கர வாகன அமைப்பே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த வாகனத்தை சென்டர் அல்லது பக்கவாட்டு ஸ்டாண்ட்டுகளைப் பயன்படுத்தாமலே தன்னிச்சையாக நிறுத்த முடியும். மேலும், ஓட்டுநர் திடீரென எழுந்து நின்றாலும் இந்த ஸ்கூட்டர் எந்தவொரு சிக்கலைச் சந்திக்காமல் தொடர்ச்சியாக முன்னேறும்.
எனவே பாதுகாப்பு பணியின் போது திடீர் மோதல்களை போலீஸாரால் எளிதில் கையாள முடியும். குறிப்பாக, மோட்ரோபாலிஸ் நகர்ந்துக் கொண்டிருக்கும்போதே போலீஸாரால் எழுந்து நின்று எதிரிகளைக் கையாள முடியும். எனவேதான் இந்த சிறப்பு திறன் வாய்ந்த மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பிரான்ஸ் அரசு அதன் பாதுகாப்பு பணியில் களமிறக்கியிருக்கின்றது.
பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மோட்டார்சைக்கிளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும். இதுபோன்ற சிறப்பு வசதிகளை இந்த முச்சக்கர வாகனம் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரைக் களமிறக்கியிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவானது குவாங்டாங் காவல்துறை வீரர்கள் பயற்சி எடுக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!